Monday, July 23, 2007

புனித மர ‘பாலசுப்ரமணியர் கோயில்



Yishun Bala Subramaniyar kovil


புனித மர ‘பாலசுப்ரமணியர் கோயில் [ஈ சூன்]


ஒவ்வொரு கோயிலிலும் தலமரம் எனப்படும்

‘தலவிருட்சம்’ இருப்பது நாம் அறிந்ததே.சிங்கப்பூர் போன்ற

நாடுகளில் அப்படி ஒரு தலவிருட்சம் அமையாதிருப்பதற்கு நகர அமைப்பும்ஒரு காரணமாகும்.


பண்டைய காலத்தில் ஆகம சாஸ்திர முறையில் கட்டப்பட்ட கோயில்கள் எல்லாம், இடத்தின் விசேஷம்,தீர்த்தத்தின் விசேஷம், ஏதேனும் ஓர் அற்புதம் நிகழ்ந்த இடம், எவரேனும் சித்தி பெற்ற - இறையருள்பெற்ற இடம்; எவருக்கேனும் இறைவன் காட்சி தந்த

இடம்; முனிவர், சித்தர், மகரிஷி, ஞானியர்போன்றவர்கள் தவம்

செய்த இடம் என சிறப்பு வாய்ந்த இடங்களில்தான் கட்டப்பட்டன.
முனிவர், சித்தர், மகரிஷி, ஞானியர் போன்றோர்கள், பெரிய பெரிய மரங்களின் அடியில்அமர்ந்துதான் தவம் செய்தனர்.

தியானம் செய்தனர், சித்தி பெற்றனர்.


எந்தெந்த மரங்களின் அடியில் அமர்ந்து தவம் செய்தால் எந்தெந்த அளவுக்குப் பலன்சித்திக்கும் என்பதையும்; எந்தெந்த மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்; அங்கே எந்தெந்ததேவதைகளைத் தியானிக்க வேண்டும் என்பதையும் அறிந்து அதன்படி செய்தனர். மேற்குறித்த மிக நுட்பமான விஷயங்களை எல்லாம் நூல்களில் எழுதி வைத்தனர்.எந்தெந்தத் தலத்தில் யார் யார் எந்தெந்த மரங்களின் கீழிருந்து நீண்ட காலம் தவம்அல்லது தியானம் செய்து சித்தி பெற்றார்களோ, அத்தலங்களில் உள்ள மரங்கள்எல்லாம் தல மரங்களாகப் போற்றப்பட்டன, வழிபாட்டுக்கு உரியதாயின. இப்படித்தான்ஒவ்வொரு தலத்துக்கு உரிய மரம் தலமரம்

அல்லது ‘தலவிருட்சம்’ என்ற பெயர் பெற்றது.


புத்தர் பிரான் ஞானம் பெற்ற இடம் போதி மரம். எனவே அரச மரம் ஞானத்தின் சொரூபம்.மரம் மனித குலத்துக்கு ஒரு வரம் என்பது மிகையானதல்ல. மனிதன் தோன்றிய காலம்தொட்டு இன்றுவரை மரம் என்பது வாழ்வின் சகல பரிமாணங்களில் ஒன்றி நின்று பிரிக்கமுடியாததாக இருக்கிறது.


வேத காலத்திலிருந்து தற்காலம் வரை தெய்வ வழிபாடு, மதம் தொடர்பான சடங்குகள்எல்லாமே மரத்தால் ஆக்கப்படுவதே. மரங்கள் மருத்துவ குணம் உள்ளவை. அம்மன்என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது வேப்பமரம். தமிழ் நாட்டு கோவில்களில்பெரும்பாலும் ஸ்தல விருட்சமாக வழிபாட்டுக்குரியதாக இருப்பது மரம்.


"மரங்களில் நான் அசுவத்தமாக (அரச) இருக்கிறேன்" என்கிறான் கிருஷ்ணன் கீதையில்.காலத்தால் முந்திய நூல் தொல்காப்பியம்

என்னும் இலக்கண நூல். தொல்காப்பியம்இலக்கணத்தை மட்டும் கூறாமல் தமிழர்களின் வாழ்வியலையும்கூறுகிறது.


தொல்காப்பியக்காலத்தில் மக்கள் நிலங்களைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்குவகையாகப் பிரித்து நான்கு நிலங்களுக்கும் தனித்தனி இறைவனையும்படைத்து வழிபட்டு வந்த னர் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.


மாயோ மேய காடுறை உலகமும்சேயோன் மேய மைவரை உலகமும்வேந்தன் தீம்புனல் உலகமும்வருண ன் மேய பெருமணல் உலகமும்முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்சொல்லிய முறையால் சொல்லவும் படுமேஎனத் தொல்காப்பியத்தில் இடம்பெறும் செய்தி மூலம் குறிஞ்சி நிலத்திற்குரியகடவுள் முருகன் என்பது புலனாகிறது.


சிங்கப்பூர் தீவின் வடப் பகுதி வட்டாரமாக அமைந்திருக்கும் இடம் செம்பவாங். சிங்கப்பூர் ஒரு கேந்திர முக்கியமான இடத்தில் அமைந்திருப்பதால்,பிரிட்டீஸார் தங்கள்இராணுவப் பலத்தைத் தூரக்கிழக்கில் நிலைப்படுத்தச் சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்தார்கள்.ஆகையால் தங்களின் பெரும் பகுதி கப்பல் படையை இங்கு நிறுத்தி வைத்திருந்தார்கள்.இவ்வட்டாரத்தின் தலைமை இடமாகச் சிங்கப்பூர் அமைந்திருந்தது.


சிங்கப்பூரின் பாதுகாப்புக்குவிமானப்படையும் கப்பற்படையும் தேவைப்பட்டது. சாங்கி வட்டாரத்தில் விமானப்படையும்செம்பவாங்கில் கப்பற்படையும் அமைக்கப்பட்டது. அத்துடன் போர் கப்பலைப் பழுதுபார்க்கும் மிகப் பெரிய பட்டறையும் இங்கு அமைந்திருந்தது. நூற்றுக்கணக்கானஇந்தியர்களுடன் உள்ளூர் மக்கள் என சுமார் பத்தாயிரத்திற்கு மேல் பல்வேறு துறையில்பணி புரிந்தனர். அவர்களில் பெரும் பகுதியினர் இந்தியர்கள். அவர்களின் குடியிருப்புக்காகக்சுமார் நூறு மனைகள் [புளோக்] நேவல் பேஸ் எனப்படும் இவ்விடத்தில் அமைந்திருந்தது.


கனவில் தோன்றிய பாலசுப்ரமணியர்...!


இந்த பட்டறையில் பணிபுரிந்தவர்களில் திரு.பி.கருப்பையாவும் ஒருவர். 1962-ஆம் ஆண்டுபொங்கலுக்கு முதல் நாள் திரு.பி.கருப்பையா ஒரு கனவு கண்டார். கனவில் முருகன் ஒரு தங்கநிற இராஜநாகத்துடன் இலந்தை மரத்தடியின் கீழ் காட்சி அளித்துள்ளார்.அவ்விடம் நேவல் பேஸ்குடியிருப்பு பகுதியின் அருகாமையில் அமைந்திருந்த புற்களூம், புதர்களும் நிறைந்த இருந்த இடமாகும்.


1962-ஆம் ஆண்டு பொங்கல் அன்று அவர் கனவில் கண்ட இடத்தினைச் சென்று பார்த்திருக்கிறார்.அங்கு அவர் கனவில் கண்ட இலந்தை மரத்தினைக் கண்டுள்ளார். அந்த இலந்தை மரம் ஆறுகிளைகொண்டு இருப்பதைக் கண்ட திரு,கருப்பையாவுக்கு ஆறு கரம் கொண்ட முருகனாகத்தோற்றமளித்து இருக்கிறது.ஒரு பாம்பு புற்றும், அருகில் அரச மரத்துடன், வேப்பமரம் ஒன்றும் இருக்கக் கண்டுள்ளார்.
இது குறித்து அக்கம் பக்கமிருந்த நண்பர்கள், தெரிந்தவர்களிடம் தான் கண்ட கனவைப் பற்றியவிபரம் கூறியுள்ளார். உடன் சில இளையர்களுடன் சென்று செடிகொடிகளுடன், புற்களும்,புதர்களும் நிறைந்த இடத்தைச் சுத்தம் செய்து மண் தரைகளைச் சமன் செய்து விநாயகர்,முருகன்,சிவன்,அம்பாள் படங்களை வைத்தும்/ முருகனுக்குரிய ஒரு பெரிய வேல் ஒன்றையும்வைத்து பூஜை செய்துள்ளார்.

தொடர்ந்து இலந்தை மரத்தைச் சுற்றி சிறு குடில் அமைத்து

விரிவாக்கப் பணியும் தொடர்ந்துள்ளது.
திரு.கருப்பையா வேலை முடிந்து மாலையில் விளக்கேற்றி பூஜைகள் செய்து வந்துள்ளார். இச்செய்தி அக்கம் பக்கம் உள்ள தமிழ் மக்களுக்குத் தெரிய வரவே அவர்களும் வந்துவழிபாடு செய்துள்ளார்கள்.


செம்பவாங் பகுதியில், (நேவல் பேஸ் உட்பட) சுற்றியுள்ள வட்டாரங்களில் நிறைய இந்தியர்கள்குறிப்பாகத் தமிழ் பேசும் தமிழர்கள் அதிகமிருந்த காரணத்தாலும், சுற்று வட்டராத்தில் கோயில்இல்லாத காரணத்தால் அங்கு ஒரு கோயிலை அமைக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கவேஒரு சிறு குழு அமைத்தார்கள்.


இலந்தை மரமிருந்த இடம் பிரிட்டீஸ் கப்பற்படைக்குச் சொந்தமான இடமானதால், முறைப்படிஅத்தளத்தின் அதிகாரி கமெண்டரிடம் அனுமதி வேண்டினர். கமெண்டர் மறுப்பு எதுவும் கூறாதுசுமார் இரண்டு ஏக்கர் நிலத்திற்கு உத்தரவாதம் தந்தனர். இலந்தை மரம் இருந்த இடத்தையும்,அதனை ஒட்டிய நிலப் பகுதியில் வழிபாடு செய்ய அனுமதி வழங்கியுள்ளார்.


கோவில் தோற்றம்/ பதிவு....!


1964-ல் சிங்கப்பூர் சட்டப்படி இக்கோயில் பதிவு செய்யப்பட்டது.திரு,சரவணன் தலைமையில் ஒரு குழு அமைந்து, முருகனுக்கு ஒரு நிலையான கோயில் அமைக்கத்தொடக்க வேலையைத் தொடங்கியது. கப்பற்படை கமெண்டரும், சூப்பிரண்டும் கோவிலுக்குவேண்டிய தளவாடப்பொருட்களைக் கொடுத்து உதவினர்.
ஆங்கிலேயரானாலும் இந்து சமய கோவில் அமையப் பெரிதும் உதவினர்.புனித மரம் பாலசுப்ரமணியம்ஆலயம் உருவாக அவர்களின் உதவி பெரும் பங்காக அமைந்தது.


1964 முதல் இக்கோயில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்துள்ளது. மக்களின் வரவும், அவர்களின்வேண்டுதல்கள் பலவும் நிறைவேறியதும், அதற்கான காணிக்கையும் பெருகவே மரப்பலகைகூரையுடன் இருந்த கோயில் சிமெண்ட,செங்கல் கொண்டு நிலையான கோயிலாகமாறியது.கோயில் திருப்பணிக்கு தமிழ்நாட்டிலிருந்து ஸ்தபதிகள் வரவழைக்கப்பட்டார்.கால்கோள் விழா திரு.P. கோவிந்தசாமி பிள்ளை அவர்களால் நடத்தப்பட்டது.


விநாயகர், முருகன், அம்மன் விக்கிரங்கள் திரு.S.L. பெருமாள் அவர்களால் 1969- ஆம் ஆண்டுதமிழ்நாட்டிலிருந்து வரழைத்துத் தந்தார்.
1971 -ஆம் ஆண்டு சனவரி 31- ஆம் தேதி புனித மரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோயில்கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுமார் 20,000 பக்தர்கள் சிங்கப்பூரின் பல பகுதியிலிருந்தும்,மலேசியாவிலிருந்தும் வந்து கண்டு களித்தனர்.


சிவபெருமான் அருவுருவில்லிங்கமாகவும்,காசி விசாலாட்சி, துர்க்கை, மாரியம்மன்,தேவி கருமாரி அம்மை,பெரியாச்சி, பைரவர், முனீஸ்வரர், இடும்பன், நவக்கிரகங்கள்போன்ற விக்கிரங்களும் இடம் பெற்றன. தனி

சன்னிதியாக சுவாமி ஐயப்பனும்இருக்கிறார்.திரு. P.A. தாசா என்பரின் வேண்டுகோளுக்கிணங்க புத்தர் சிலையும்நிறுவப்பட்டன.


புதிய நிர்வாகம்....!


1976 - ஆம் ஆண்டு திரு.E. நாராயணசாமி தலைமையில், ஆர்வமும், துடிப்பும் கொண்டஇளையர்கள்புதிய நிர்வாகத்தில் இணைந்தனர். கோயில் கட்டிடத்தில் மாற்றங்கள்செய்ததோடு புதிய சிற்பங்கள் உருவாகியதோடு பழைய சிற்பங்களைச் செம்மைப்படுத்தினர்கோயில் புதிய தோற்றத்தையும், புதிய பொலிவினைப் பெற்றது.இரண்டாவது கும்பாலிஷேகம் 1977- ஆம் நவம்பர் மாதம் நடைபெற்றது.
கோயில் இடமாற்றம்.


பிரிட்ட னின் பொருளாதார நெருக்கடியால் துரக்கிழக்கில் தனது இராணுவப் படையைக்குறைக்க எண்ணியது. 1971 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31- நாள் தொடக்கம் கட்டம்கட்டமாக படை மீட்பைத் தொடங்கியது. இதன் காரணமாக கோயில் நிலம் உட்படகப்பற்படைத்தளம் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று முதல் அரசாங்கவரியாகக் கோவிலுக்கு சிங்கப்பூர் வெள்ளி ஒ ன்று வசூலிக்கப்பட்டது.


இதற்கிடையில் எம்.ஆர்.டி எனும் விரைவு இரயில் மேம்பாட்டு அபிவிருத்தித் திட்டங்களுக்காவும்கோவில் வேறு இடம் மாற வேண்டிய நிலை உருவாகியது. நிலத்திற்கு நஷ்ட ஈடாக வீடமைப்புவளர்ச்சிக் கழகம் ஒரு லட்சத்து எட்டாயிரம் வெள்ளியைக் கொடுத்தது.
நிர்வாக குழுவினர் மாற்று இடத்தைத் தேடி தற்போது கோவில் அமைந்திருக்கும் இடத்தைத்தேர்ந்தெடுத்தனர். நான்கு லட்சத்து எட்டாயிரம் வெள்ளிக்கு நிலம் வாங்கப்பட்டது.நிதி திரட்டபல்வேறு நடவடிக்கையில் கோயில் நிர்வாகம் ஈடுப்பட்டது.


1996-ஆம் ஆண்டு சனவரி 26- ஆம் நாள் பாலஸ்தானம் செய்யப்பட்டு, 1997 ஆம் ஆண்டுஅக்டோபர் மாதம் புதிய ஆலய கட்டுமானப் பணி தொடங்கியது. பாலசுப்பிரமணிய சுவாமிதிருக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், இராஜ கோபுரம் என முழுக்கோவிலாக அமைந்தது. இவ்வமைப்புகள் யாவும் பாண்டியன் கட்டிட கலை முறைப்படி16 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 16 பேறுகளைக் குறிப்பதாக அமைந்துள்ளது.இந்தத் தூண்களுக்கு ‘’சித்திரங்கண்ட ஸ்தம்பம்’’ எனப்பெயர். அதாவது சித்திரங்களால்அலங்கரிக்கப்பட்ட தூண்கள் என்பது பொருளாகும். மேலும் இக்கோவிலுக்குப் பதினாறுஅடி உயரம் கருங்-கல்லில் அஞ்சனேயர் விக்கரம் சண்முகம் ஸ்தபதியாரின் ஊரானதேவகோட்டைலிருந்து உருவாக்கப்பட்டு இங்கு கொண்டு வந்து ஸ்தாபிக்கப்பட்டதுகோவில் வளாகத்திலேயே திருமண மண்டபம் கட்டப்பட்டது.


1999 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 –ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.விழாக்களில் முக்கியமாக, விஷேசமாக பங்குனி உத்திரம் இங்குக் கொண்டாடப்படுகிறது.


பங்குனி உத்திர விழா....!


பங்குனி மாதத்தில் வரும் மிக முக்கிய நாள் பங்குனி உத்திர திருநாள். உத்திர நாளோடுபெளர்ணமியும் சேர்ந்து வரும் ந ன்னாள். பங்குனி உத்திர திருநாளைச் சைவர்களும்,வைணவர்களும் தொன்று தொட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கொண்டாடி வந்துள்ளனர்என்பதற்கு இலக்கியச் சா ன்றுகள் உண்டு.முருக கோவில்களில் பால் காவடி எடுத்தல், படியேற்றுவிழா போ ன்ற விழாக்கள் நடைபெறுகின்றன.


முதன் முதலாக 1965-ல் பங்குனி விழா ஆரம்பிக்கப்பட்டது. சிவசாமி பண்டாரம் 6 இளையர்களுடன்காவடிதூக்கி பங்குனி உத்திர விழாவைத் துவக்கி வைத்தார். இன்று பல நூறு காவடிகளும்,பால்குடங்களும் முருகனின் பாதகமலங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது.பங்குனி உத்திரத் திருவிழாதொடர்புடன் இரத ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்பட்டது. 1966- ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள்கொடுத்த சிறு வாகன வண்டியை 14 அடி இரதமாக மாற்றி அமைத்து முருகப் பெருமானின்படத்தை வைத்து கயிற்றால் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். அப்போது நேவல் பேஸ்குடியிருப்பு புளோக் வட்டாரத்தில் மட்டுமே இரத ஊர்வலம் நடைபெற்றது.


இன்று காலமாற்றத்திற்கு ஏற்ப ஈ சூன் குடியிருப்பு வீடமைப்பு வட்டாரப்பகுதியில் இரத ஊர்வலம் நடக்கிறது.

ஆலய முகவரி:-

HOLY TREE SRI BALASUBRAMANIAR TEMPLE,
10, Yishun Industrial Park A.Singapore 786772.

Tel : 67561912 / 67585528

- கிருஷ்ணன்,

சிங்கை.

1 comment:

Earn Staying Home said...

உங்கள் ப்ளாக் நல்ல ப்ளாக்