Thursday, July 26, 2007

ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம்

SRI RUTHRA KALAIAMMAN







ருத்ர
காளியம்மன்
ஆலயம்
த்தனை அறிவு பெற்றும் உன்னை நான் அறிந்தேன் இல்லைஎன்றுதான் எனக்கு உன்னருள் வருமோ? ஏழையான என்னைபத்தானாய்ப் பாட வைப்பாய் பரம கருணாகரி பார்வதிபண்பும் பரிவும் பணியும் அருள்வாய் உருத்திரகா ளியேகொத்தடிமை கொண்டேன் குணத்தின் குன்றே! குவலயம் காப்பவளே!கோல மயிலே ! கூவும் குயிலே! கோமளமே! முத்தே!எத்தோ நின் அன்பை நான் என்றறிவேன், அத்தனை மணந்தவளே!எத்தனையும் போதமில்லா ஏற்றம் நிறைந்த என் கண்மணியே!
ஆதி சக்தியையும் ஆதிசிவத்தையும் ஒன்றை விட்டு ஒன்றைத் தனியாக பிரிக்க முடியாது என்றாலும்,உலக இயக்கத்திற்கு காரணமாகச் சிவத்திற்கு அசைவு ,துடிப்பு, சலிப்பு ஆகிய தன்மைகளை உண்டாக்குகிறது.அந்த ஆதிசத்தி. அதனால், சிவம் மறுநிலை எய்தி சூர்த்தெழுந்து படைத்தல், காத்தல், அழித்தல் எனும்முத்தொழிலில் செய்ய முயல்கிறது. அதற்கேற்ப அச்சிவத்தொடு ஆதிசக்தி தன்மயமாகப் பராசக்தியைப்படைத்துக் கொடுக்கிறாள். சக்தி கூடும்பொழுது எல்லா இயக்கங்களும் நடைபெறும்.
சக்தி கூடும்போது உருவமற்றதற்கு உருவமும், நாமம் மற்றதற்கு நாமமும், குணமற்றதற்குக் குணமும்,தெளிவற்றதற்கு நிலையும் உண்டாகின்றன.அதனால், அருட்பிழம்பாகிய ஆத்சக்தி அந்தப் பராசக்தியின்உருவிலிருந்து, பிராஹ்மி, வராகி மகேஸ்வரி,கெளமாரி, வைஷ்ணவி, சாமுண்டி, துர்க்காதேவி, ருத்திரகாளிஎன அட்ட சக்திகள் துணையாகப் படைத்தாள். இந்த சக்திதான் இந்த பிரபஞ்சத்தில் எண்ணிலடங்காஅற்புத செயல்களைச் செய்கின்றன.
சத்வ குணத்தில் சாந்தமாக பார்வதியாகவும், இரஜோத குணத்தில் வீர உருவத்தில் துர்க்கையாகவும்,தமோ குணத்தில் உக்கிர ருத்திர காளியாகவும் விளங்கி உலகு அனைத்து சீவன்களிலும், பல்வேறு துறைகளிலும்பலவாறாக நல்வழிப்படுத்திப் பின் சிவ சன்னதியில்உறைகிறாள்.அப்படி சிங்கார சிங்கையில் அமைந்திருக்கும்ருத்திர காளியம்மனை அடுத்து காண்போம்.
சிங்கப்பூர் துறைமுக ஆணை நிறுவனத்தின் அடுக்குமாடி பண்டகசாலைத் தொகுதி இருக்குமிடத்தில் இருந்தஅலெக்சான்ரா செங்கல் சூளைப் பகுதியில் ஒரு மூலையில் சாதாரணதோர் அமைப்பில் குடிக் கொண்டு இருந்தருத்ர காளியம்மன், பொலிவு பொங்கும், கலையமசமிக்க அழகிய பெரிய ஆலயத்தில் வீற்றிருப்பது, ஒரு கனவுநினைவானதுதான்.
இப்போது சிங்கப்பூர் துறைமுக ஆணை நிறுவத்தின் அடுக்குமாடி பண்டகசாலை தொகுதி இருக்குமிடத்தில்இருந்த அலெக்சான்ரா செங்கல் சூளையில் அமைந்திருந்த கோயிலின், மொத்த பரப்பளவு 460 ச.அடி. இந்தவேலிக்குள் பலகை வீடு ஒன்று இருந்தது. அதில்தான் கோயில் குருக்கள் இருந்தார். கோயிலுக்கு தென் கிழக்கில்சுமார் 100 அடி துரத்தில் முனிஸ்வரர் சன்னிதி அமைந்திருந்து.
கோயிலும் சரி, சன்னிதிலும் சரி, கலை வேலைப்பாடுகள், சிற்பவேலைப்பாடுகள் இல்லை. பசீர்பாசாங் சாலையிலிருந்து300 அடி தூரத்தில் இருந்த கோயிலுக்கு ஒன்றை அடி பாதை சென்றது. அதுதான் கோயிலை அடைவதற்கான வழி.சுற்றிபுற அமைப்பு நூதனமான ஒன்றாக இருந்தது. கிழக்கே சுமார் 300அடி துரத்தில் ஒரு பள்ளி வாசல், தென்கிழக்கே150 அடி தொலைவில் ஒரு பெண்டிஸ்கோஸ்ட் தேவாலயம் பின்னால் 30 அடிக்கு அப்பால் ஒரு சீ னக் கோயில்.வடமேற்கில் சுமார் 60 அடி தூரத்தில் ஒரு மெதடீஸ் தேவாலயம். அனைத்தும் அலெக்சான்ரா செங்கல் சூளைவட்டாத்தில் அமைந்திருந்தது, இந்த ஆன்மீக இல்லங்கள் அனைத்தும் பல்லாண்டு காலம் உண்மையான சகிப்புதன்மையுடன் இயங்கி வந்தன.
ருத்ர காளியம்மன் ஆலய வரலாறு பற்றிய தகவல்படி இக்கோயில் 1913-ஆண்டில் பலகை கட்டிடமாக,சிறிய அமைப்பில் உருப்பெற்றது. சூளையில் பணி புரிந்து வந்த திரு.லட்சுமணன் நாடார் என்பார்தான்இவ்வாலயம் தோன்ற காரணமாக இருந்தார்.1923-ல் அலெக்சான்ரா செங்கல் சூளையில் தாய் நிறுவனமானபோர்னியோ கம்பெனியின் ஆதரவில், செங்கற் கட்டிடமாக மாறியது. இக்கோயில் பெரும்பாலும் இந்துக்களாகஇருந்த சூளையின் இந்திய ஊழியர்களுக்கும் பக்கத்து வட்டாரங்களின் வாழ்ந்து வந்த இந்துக்களுக்கும்வாடிக்கையான வழிப்பாட்டு இல்லமாக இருந்து வந்தது. அக்காலத்தில் பாசீர் பாஞ்சாங், அலெக்சன்ரா,தெலுக் பிளாங்கா வட்டாரங்களில் வேறு இந்து கோயில் அமைந்திருக்கவில்லை. கோவிலுக்கு அருகில்அமைந்திருந்த ஆலயம் நான்கு மைல் தூரத்தில் இப்போது அமைந்திருக்கும் சவுத் பிரிட்ஜ் சாலையில்அமைந்திருந்த மாரியம்மன் ஆலயமே.
கோயில் அலுவல்களை திரு.லட்சுமணன் நாடாரே கவனித்துவந்தார். அதற்கு பின் 1960,1963,1967,1969ஆண்டுகளில் பல நிர்வாகத்தின் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டது. செங்கல் சூளை இந்து ஊழியர்கள்,பக்கத்து வட்டார இந்து பெருமக்கள் ஆகியோரின் நன்கொடைகளைக் கொண்டுதான் கோயில் இயங்கி வந்தது.முதலில் போர்னியோ கம்பெனியாரும், பின்னர் அலெக்சான்ரா சூளை நிருவாகத்தினரும், 1967 முற்பகுதி வரைபல்லாண்டு காலமாக கோயிலுக்கு மாதம் 10 வெள்ளி நன்கொடை அளித்து வந்தனர். செங்கல் சூளையில் இந்துஊழியர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கிய போது, பாசீர் பாஞ்சாங் மின் நிலைய இந்து ஊழியர்கள்நல்லாதரவு நல்கினர். இருப்பினும் 1967 ஜுன் மாதத்திற்குப் பின்னர் ஆலயத்தை நடத்துவதற்கு பணபற்றாகுறை ஏற்பட்டது.
1968 ஆம் ஆண்டு 11-ஆம் நாள் ருத்ர காளியம்மனின் சுதைசிலைக்குப் பதிலாக புதிய கருங்கல் சிலைஸ்தாபனம் செய்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. 1969 அக்டோபர் 23-ஆம் நாள் புதியகருங்கல் சிலையாக விநாயகர், சுப்ரமணியர் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
ஈராண்டுகளுக்குப் பின் 1971-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் நாள், அலெக்சாண்ரா செங்கல் சூளை நிர்வாகத்தினர்,தங்கள் நிலத்தைச் சிங்கப்பூர் துறைமுக ஆணை நிறுவனத்திடம் விற்றுவிட முடிவு செய்தனர். 1972 ஜூன் 30 ஆம்நாளுக்குள் வெளியேறிவிட வேண்டுமென்று அறிவிப்பு கொடுத்தனர். இழப்பீடாக 260,000 சிங்கப்பூர் வெள்ளிகொடுக்கப்பட்டது.
1977-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இப்போது ருத்ரகாளியம்மன் அமைந்திருக்கும் டெப்போ சாலையில்2000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ருத்ர காளிம்மன் ஆலயம்எழுப்புவதற்கு கொள்கை அளவில் கொண்டு, கல்வி,கலாச்சார,சமுதாய மற்றும் பொழுது போக்கு நடவடிக்கைகளுடன் கூடிய ஆலய அமைக்க முடிவு செய்யப்பட்டு,மாமல்லபுர கட்டிடக்கலை சிற்பக் கல்லுரி முதல்வர் திரு.வி.கணபதிஸ்தபதி பழைய கலை அம்சத்துடன் நவீனத்தையும்இணைத்து ருத்ர காளியம்மன் ஆலயம் எழுந்தது.
65 அடி இராஜகோபுரத்துக்கான திட்டம் 2002-ஆம் மே மாதம் அனுமதிக்கப்பட்டு, 2003-ஆம் ஆண்டு முடிவடைந்தது.1-9-2003 –ல் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தர்கள் வழிபடசிறந்த வசதிகளையும் உகந்த சுற்று சூழலையும்உருவாக்கி கலை நயமிகுந்த ஆலயமாக மிளிர்கிறது.
படைத்தல், காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் எனப்படும் ஐந்து தொழில்களில் நான்காவதுஇடம் பெறும் மறைத்தல் என்பது ஜீவன்களை உய்விக்க தேவைப்படுகிறது.இதுவே திரோதானம்என்று பெயர் பெறுகிறது. இந்தச் திரோதானச் சக்தியிலிருந்து இச்சா சக்தி, ஞான சக்தி,கிரியா சக்தி தோன்றுகின்றன. மனிதர்கள் ஆணவம்,கன்மம், மாயை, என்ற மும்மலங்களுடன்இருக்கின்றார்கள். இவர்களின் மும்மலங்களையும் நீக்கி அவற்றின் சித்தமலம் அறுவித்து சிவமாக்கிஆட்கொள்ள வேண்டும் என்பதே சிவத்தின் செயலாகும்.
இச்சா சக்தி,கிரியா சக்தி, ஞான சக்திகளையும் உமாமகேசுவரனின் ஒரு பாகமாக விளங்கும்உமையாளாகப் பாவித்து சைவர்கள் வழிபடுகிறார்கள். இவ்விதம் சக்தியோடு கூடிய சிவனாரை வழிபடுவர்கள்உலகில் எல்லா நலனும் பெற்று வாழ்வார்கள் என்பதால் ருத்ர காளியம்மன் ஆலயத்தில் சிவனுடன்சக்தியையும் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் தெட்ச்சிணா மூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மாஆகிய கலைமிகுந்த சிற்பங்களும் இவ்வாலய பிரகாரங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
மற்றும் ஆலய விமான கோபுரங்களில் சிவபெருமான்,மாகவிஷ்ணு, பிரம்மா ஆகியசிற்பங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆலய முன்புறத்தில் கயிலை மலையில் காட்சிதந்த சிவபெருமான்,சக்தி, விநாயகர், முருகப்பெருமான் ஆகிய சிற்பங்களும்அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாலயம் ருத்ர காளியம்மன் வாயுபாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.இந்த வாயுக்கு அதிபதியானவர் காளாஹஸ்திரி. இதை வழிபடுவோர்சகலவிதமான நன்மைகளும் பெருவர்.
ஆலய முகவரி:-
SRI RUTHRA KALAIAMMAN TEMPLE,
100, Depot Road,Singapore. 109670
Tel. 62737470
Fax.62735843
- கிருஷ்ணன்,
சிங்கை.

No comments: