Monday, July 23, 2007

ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர் சிவன் ஆலயம்


Sir Manmatha Karuneshvarar Sivan Temple

ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர்
சிவன் ஆலயம்

காசிபமுனிவருக்கு மயை மூலமாக சூரபத்மன் என்ற அசுரன் பிறந்தான்.கடுந்தவம் புரிந்து பரமேசுவனிடம்அளப்பரிய வரங்களை பெற்ற சூரன், முன்று லோங்களும் அவன் ஆளுகைள் வந்தன.வானவர்களை அடக்கிகடுமையாகக் கொடுமைப்படுத்தி வந்தான். தேவேந்திரன் மைந்தனாகிய ஜயந்தனும், தேவர்களும்,தேவமாதர்களும் சிறையில் அடைபபட்டு வேதனைப்பட்டார்கள்.
சூரபத்மனின் கொடுமை தாங்காமல், இந்திரன் மேருமலையில் பெருந்தவம் செய்தான்.ஈசன் தரிசனம் தந்து''தவத்தின் நோக்கமென்ன? என்று வினவினார். ''அசுரன் சூரபத்மனின் தொல்லைகள் எல்லை மீறிவிட்டன.எதிர்த்துப் போரிட களுக்குப் போ எங்திய வலுவில்லை. ஐயனே! இதற்கொரு முடிவைக் காணவேண்டும்''என வேண்டி நின்றான்.
'இந்திரா! கவலையை விடு. நம்மால் தோற்றுவிக்கப்படும் குமாரனால் சூராதி அவுணர்கள் வேரோடு சாய்வர்''எனப் பெருமான் அருள்பாலித்தார். இந்திரன் ஆறுதல் கொண்டாலும் பரமன் இந்த அற்புதத்தை எப்போதுநிகழ்த்துவார்?எப்போது நம்துயர் விலகும் என்ற நெருடலோடு, பிரமதேவரை அணுகினான். பிரமதேவர்திருமாலை நாடினார். 'சிவமூர்த்தியின் யோகநிலை கலைந்தால்தான் பார்வதி திருமணம் நடந்தேறும்;பின்னர் குமாரர் தோன்றுவர்; சூரசம்ஹாரம் நிகழும்' என்றார்
'' பிரபோ! ஈசனை நெருங்கி அவருடைய யோகநிலையைக் கலைப்பதென்பது நிகழக்கூடிய காரியமா?அது சாத்தியமாகுமா? எனக் கேட்டார். ''மன்மதன் ஒருவரால் மட்டுமே முடியும். எல்லா வில்லாளிகளும்அம்பு தொடுத்து ஒன்றை இரண்டாகுவார்கள். மன்மதன் மட்டுமே இரண்டை ஒன்றாக்கும் ஆற்றல் பெற்றவன்.எனவே அவனை ஐயனிடம் அனுப்பி வையுங்கள்'' என்றார்.
பிரமதேவரும் மன்மதனை அழைத்து, ''சூரனின் கொடுமைகள் பற்றியும், தேவலோகம் படும் அவதி பற்றிஎடுத்துரைத்து, இறைவன் அருள்பாலித்தபடி குமாரக் கடவுள் தோன்ற வேண்டுமாகின் சிவத்தின் தவத்தைக்கலைப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை.'' என அவனிடம் வேண்டினார். இதைக் கேள்விப்பட்ட மறுகணமே,மன்மதன் தீயை மிதத்தவன் போலாகி, 'ஈசனுடைய மகிமையை நன்கு உணர்ந்த தாங்களா இந்த விபரீதவிளையாட்டில் இறங்க என்னைத் தூண்டுகிறீர்கள்? நான் அற்புத விளையாட்டுகளைச் செய்தவன்தான்.என்னுடைய பாணங்களுக்குக்குத் தப்பியவர் யாருமில்லைதான். ஆனால், பரமனை என்னால் இவ்விஷயத்தில்நெருங்க முடியுமா? எனப் பலவாறு மறுத்துரைத்து மன்றாடினான். மறுப்புரை செய்த மன்மதனைக் கடைசிக்கட்டமாக, ''மீண்டும் மறுத்தால், எனது கொடிய சாபத்திற்கு ஆளாக நேரிடும்'' எனக் கோபத்தோடு சொன்னார்பிரமன்.எந்த வகையில் பார்த்தாலும் இருவரின் சாபங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதையுணர்ந்த மன்மதன்,பரமனிடம் சாபம் பெற்று மடிவதே மேல் என்ற முடிவோடு சம்மதித்தான். இதனை மனைவி இரதிதேவியிடம்,விவரித்தான். இரதியையும் அழைத்துக்கொண்டு கரும்பு, வில், கரும்பு நாண், அரும்பு பாணம் எனபஞ்சபாணங்களோடு, தென்றலாகிய தேரில் ஏறிக் கயிலாயம் நோக்கிப் பயணமானான்.
மன்மதன் தேரேறி மேலை வாயிலில் நுழைந்தான். கல்லால மரத்தினடியில் சனகாதியர் முன்பு எம்பெருமான்அமர்ந்திருந்த திருக்கோலத்தைக் கண்டான். ''சகல லோகங்கலையும் இமைப்பொழுதில் சாம்பலாக்கி,நீறு செய்யும் நிமலனைப் பூமலர்க்கணை கொண்டா போர் புரிவது'' என்று கலங்கி விதி வலியது என்றமுடிவோடு, கரும்புவில்லை வளைத்து நாணேற்றி, தண்மலர்க்கணைகளைப் பூட்டி, மதிசடை நாயகன் முன்சென்று தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு, மேனி நடுங்க பாணங்களைப் புட்டி வில்லை வைத்து இறைவன்திருமேனி நோக்கிப் பிரயோகம் செய்தான்.
விரைந்து சென்ற பாணங்கள் ஈசனின் மேனியைத் தாங்கிய மறுகணமே அவரது நிஷ்டை கலைந்தது.கோபத்தில் கண்கள் சிவக்க, எய்தவனை நோக்கினார். நெற்றிக்கண் திறந்ததும் அதிலிருந்து பாய்ந்ததீப்பொறிகள் இமைப்பொழுதில் மன்மதனைச் சாம்பலாக்கிவிட்டது. இதனைக் கண்ணுற்ற இரதிதேவிதலைவிரி கோலமாக இறைவனிடம் ஓடி வந்து புலம்பினாள்.
''தேவர்களின் துயரத்தைப் போக்கத்தான் என் மணாளன் இந்தப் பாதகச் செயலில் இறங்கினார்.காரணகர்த்தாவாகிய அவர்களை மன்னித்த பிரபு, என்னவருக்கு உயிர்ப்பிச்சை அளித்து எனக்குமீண்டும் வாழ்வளிக்க வேண்டும்'' என முறையிட்டாள். ஈசனும் ''பெண்ணே! கவலைப்படாதே!உன் கணவரை உயிர்ப்பித்துத் தருவேன். ஆனால், உன் கணவன் உன் கண்ணுக்கு மட்டுமே தெரிவான்''என உரைத்தார்.
மிகுந்த கருணைக் கொண்டு மன்மதனின் உயிரை உயிர்பித்து தந்தததால் ஈசனுக்கு காரூணீஸ்வரர்என்று பெயர் வந்தது. மன்மதனுக்கு கருணை புரிந்ததால் ''மன்மத காரூணீஸ்வரர்'' ஆனார்.

சிங்கப்பூரில் அமைந்திருக்கும் ஒரே ஒரு ஆலயம் '' ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர் சிவன் ஆலயம் ''சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர் சிவன் ஆலயம் தோற்றம் கண்டது.காலாங் காஸ்வேர்க்ஸ் (Kallang Gas Works) சிவன் கோயில் என பெரும்பாலான பக்தர்களால்அழைக்கப்பட்ட இவ்வாலயத்திற்கு ஒரு வளமான பாரம்பரியம் உண்டு.
போக்குவரத்து அதிகம் உள்ள காலாங் சாலையிலும்,சிங்கப்பூர் குடியேற்ற (இமிகிரேஷன்) கட்டடத்திலிருந்துசுமார் 300 மீட்டர் தொலைவிலும், அமைதியான, பசுமையான சுற்றுபுறம், ஆலயத்தின் பின்புறத்தில்நெளிந்தோடும் அழகான காலாங் நதி..., இந்த சுழ்நிலையில் அமைந்துள்ளது ஆலயம்.
தமிழ் மக்கள் வழிபாட்டுக்கு ஒரு தலம் அமைத்துக்கொள்ள ஸ்ட்ரேஸ் செட்டல்மெண்டு(Governor of Straits Settlement) கவர்னரால் வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் 1888 - ஆம் ஆண்டுசனவரி 1-ம் தேதி கோயில் ஸ்தாபிக்கப்பட்டது. இருபத்தொரு ஆண்டுகளுக்குப் பின் 1909 –ஆம் ஆண்டு மார்ச் மாதம் பழைய பட்டாவுக்கு பதில் புதிய பட்டா 99 ஆண்டு குத்தகைக்குகொடுக்கப்பட்டது.
இடைப்பட்ட இருபத்திரண்டு ஆண்டு காலத்தில், 1909 –ல் பட்டாவில் கையெழுதிட்ட அனைவரும்இயற்கை எய்தி விட்டதால், 1931–ல் காஸ்வேர்க்கில் தலைமை போர்மேனாகப் பணியாற்றியதிரு.ஏ.வி.இருளப்ப பிள்ளை கோயிலின் விவகாரங்களை எடுத்து நடத்தினார். அவரும் அவர்களதுநண்பர்களும், சகாக்களும் ஆலயத்தை காரை, காங்கிரீட் கட்டிடமாக மாற்றினார்கள். ஆனாலும் அவர்கள்அவர்கள் நிதிப் பற்றாக்குறையை எதிர்நோக்கினார்கள்.
1934-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி திரு.ஏ.வி. இருளப்ப பிள்ளை கேட்டுக் கொண்டதற்கு இணங்கமறைந்த தங்களின் தந்தை கு.வேலுப்பிள்ளை நினைவாக கோயிலைக் கட்ட திரு.பக்கிரிசாமி பிள்ளையும்அவரின் சகோதரர் திரு.வி.நாராயணசாமி பிள்ளையும் ஒப்புக்கொண்டனர்.
சுவான் அண்ட் மெக்லரண்ட்(Swan & Mclaren) எனும் கட்டடக் கலை நிறுவனம் கோயில் வரைபடங்களைதயாரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. 1934–ம் ஆண்டு டிசம்பர் 27–ம் தேதி புதிய வரைப்டம் தயாரானது.விமானம் மற்றும் அலங்கார வேலைகளை மேற்கொள்ள திரு.கந்தசாமி, திரு.எஸ்.ராஜாமணி ஆகிய ஸ்தபிதகள்1935-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி தமிழ்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டனர். 1937 ம் ஆண்டுகும்பாபிஷேகம் கண்டது.
இருளப்ப பிள்ளையும் அவரது குழுவினரும் தொடர்ந்து நிதிப்பற்றாக்குறை பிரச்சனையை எதிர்நோக்கியதால்1939–ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி திரு.வி.பக்கிரிசாமி பிள்ளை கோயில் தலைவராக நியமிக்கப்பட்டதுடன்ஆலய விவகாரங்களை கவனித்துக் கொள்ளவும், மிகுதியாக ஏற்படும் செலவுகளை ஏற்றுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டார். அவரின் தலைமைத்துவத்தின் கீழ் 1951-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதியும்,1974 நவம்பர் 29-ம் தேதியும் ஆலயத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
1993-ம் ஆண்டிலிருந்து நிர்வாக அறங்காவலரான திரு.பி சிவராமனும்நிர்வாகக் குழுவினரும் சிறுசிறு புதுப்பிப்புபணிகளை மேற்கொண்டனர். கடைசி புதுப்பிப்பு பணி 1997-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி அதாவது, 1937 –ம்ஆண்டில் வந்த ஈஸ்வர தமிழ் ஆண்டின் 60 கால சுழற்சிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம்நடத்தப்பட்டது.
ஆலய வலம்
மூலவர் மூர்த்திகள்
நந்திகேஸ்வரர்.
முதலில் நம்மை வரவேற்பவர் நந்திகேஸ்வரர். சிவபெருமானின் ரிஷப வாகனமாகும். ஈஸ்வரருக்கு மிகவும்அருகில் இருப்பவர். நந்தி பெருமான் எப்போதுமே சிவனை நோக்கி அமர்ந்திருப்பார்.பரமாத்மவுடன் ஆத்மாஇணைய வேண்டும் என்பதை பிரதிபலிக்கும் வகையில் நந்திகேஸ்வரர் சிவபெருமானை வணங்கும் நிலையில்இருக்கிறார்.
மன்மத காரூணீஸ்வரர்.
ஆலயத்தில் நுழைந்தவுடன் நமக்கு முதலில் காட்சியளிப்பர் ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர். மூல மூர்த்தியாகஇவ்வாலயத்தில் அமைப்பட்டு அருவுரு சிவலிங்கம் ஸ்ரீ மன்மத காரூணீஸ்வர சிவன் என்று அழைப்படுகிறது.சிவலிங்கம் சிவரூபமாக அமைந்துள்ளது. நம் கண்ணுக்கு புலப்படும் சிவலிங்கத்தின் மூன்று பிரிவுகள்முத்தேவர்களையும் பிரதிபலிக்கின்றன்.
சதுர அடிப்பாகம் பிரம்மா, எண் கோண தூண்வடிவம் விஷ்ணு, வட்டமான மேற்பகுதி ருத்ரர்.சுத்த வித்யா தத்துவம் எனும் பிரிவில் ஒரு பெரும் பகுதியாக இந்த முத்தேவர்கள் அமைந்துள்ளனர்.வட்டமான மேற்பகுதியில் சிவதத்துவத்தின் ஐந்து கூறுகள் அமைந்துள்ளன. அதைப் போலவேவிஷ்ணுவிற்கு ஏழு வித தத்துவமும் பிரம்மாவிற்கு 24 ஆத்ம தத்துவமும் உள்ளன.
சிவலிங்க ரூபங்களை அதாவது உச்சிமுகம் ஈசானம், கிழக்கு முகம் தற்புருடம், தெற்கு முகம் அகோரம்,வடக்கு முகம் வாமதேவம், மேற்கு முகம் சத்தியோசாதம் ரூபங்களை சிருஷ்டித்தல், காத்தல், அழித்தல்,மறைத்தல், அருளிச்செய்தல் ஆகிய ஐந்து செயல்களை சிவலிங்கம் பிரதிபலிப்பதாகக் கூறுவதுண்டு.
இதனை திருமூலர் திருமந்திரத்தில் இப்படி கூறுகிறார்.ஐந்து முகம்உள ஐம்மூன்றுஐந்தினோடைந்து கரதலம் தானுளஐந்துடன் ஐந்தாயுதமுள நம்பி என்நெஞ்சு புகுந்து நிறைந்தது நின்றானே.
விநாயகர்
அருவுரு சிவலிங்கத்தின் இடது புறம் வெற்றிகரமாக எல்லா காரியங்களும் நிறைவேறவும்,விக்கினங்கள் நீங்கவும் அருள்புரியும் விக்னேஷ்வரர் விநாயகர்.
தண்டாயுதபாணி
வலது புறம் எளிமையான வாழ்வு வாழவேண்டும் என்ற நோக்கில் முருகன் தண்டாயுதபாணிஉருவத்தில் உள்ளார்.
பர்வதவர்த்தினியம்பாள்(பார்வதி)எல்லா உயிரினங்களுக்கும் கருணை கொண்டு காக்கும் அன்னையாக பர்வதவர்த்தினியம்பாள்(பார்வதி) அருள்பாலிக்கிறாள்.
தட்சிணாமூர்த்தி.சிவனின் மறு உருவமே தட்சிணாமூர்த்தி. பேருண்மையை போதிக்கும் குருவாக இங்கும் அருள்புரிகிறார்.
சண்டீஸ்கேஸ்வர்.சிவபெருமானையே சதாகாலமும் தியானித்துக்கொண்டு இருக்கும் சண்டீஸ்கேஸ்வர்.
நவகிரங்கள்
சிவ தரிசனத்தின் முழுப்பயனை இவரின் அருளாலேயே கிடைக்கப்படுகிறது.கோளங்களின் தாக்கத்தால்ஏற்படும் தீங்குகள் குறைய நவகிரங்கள் தனி மண்டபத்தில் ஒரு பீடத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.
பைரவர்.ஆலயத்தின் காவல் தெய்வாமாக இருப்பவர் பைரவர்.ஆலய நிறைவு பூஜையான அர்த்தஜாம புஜையைஇவர் சன்னதியில் பூர்த்தி செய்து விடைபெறுவது சிவாகம மரபில் இருந்து வருகிறது.இங்கும்ஆலயத்தையும் நகரத்தையும் காவல் தெய்வமாக இருந்து காத்து அருள் புரிகிறார்.
- கிருஷ்ணன்,
சிங்கப்பூர்.

No comments: