Thursday, August 9, 2007

ஸ்ரீலாயன் சித்தி விநாயகர் ஆலயம்

Sri Layan Vinagar Temple

ஸ்ரீலாயன் சித்தி விநாயகர் ஆலயம்

விநாயகர் வழிபாடு மிகவும் தொன்மையானது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னமே பரவியிருந்தது என்பது வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். விநாயகர் ஆனந்தமானவர்; பெருமையுடையவர், சச்சிதானந்த செரூபி, குணங் கடந்தவர்; தேகங்கடந்தவர்; காலங்கடந்தவர்; என்று விக்கினங்களை தீர்ப்பவர், எக்காரியம் தொடங்கும் முன்பு இவரின் ஆசியும் வேண்டும் என்பது விநாயகரைப்பற்றி கூறும் சாராம்சாகும். காட்சிக்கு எளிமையானவரான இவருக்கு தமிழ் நாட்டில் கோயில்� இல்லாத ஊர்� இஇல்லை. மூலை முடுக்குகளிலும்,சாலை சந்துகளிலும், ஆற்றங்கரை குளக்கரைகளிலும், ஆலமரத்தடியிலும், அரச மரத்தடியிலும் காட்சிக்கு எளியவராக விளங்குபவர் விநாயகப் பெருமான். மெய்யடியார்களுக்கு எளிதாக வந்து அருளும் இயல்புடையவர்.
�விநாயகப் பெருமானுடைய உருவம் விசித்திரமானது; சிரசு யானையைப் போன்றும் கழுத்து முதல் இடைவரை தேவர், மனிதரைப் போன்றும் அதற்கு கீழ்ப்பகுதி பூதங்களைப் போன்றும் அமைந்துள்ளது. அவர் ஆணுமல்லர்; பெண்ணுமல்லர், அலியுமல்லர். அண்டச்சராசங்களுமாக உள்ளார்; அவை அனைத்தும் தம்முள் அடக்கம் என்பதை அவரது பேழை வயிறு குறிக்கும். அடியார்க்கு வேண்டிய சித்திகளையும் அவற்றை அடைதற்கேற்ற புத்தியினையும் அருளுபவர்.

''சித்தி புத்தியோர் புகழும் உத்தம குணாதிபன்''.விநாயகருடைய காது, தலை, துதிக்கை ஆகிய மூன்றும் சேர்ந்து '' ஓம் '' என்னும் பிரணவத்தின் வடிவைக் காட்டும்.
அகரமாகிய எழுத்தைப் போன்று முதன்மையும் சிறப்பும்; அறிவின் திருவுருவம்; சர்வ வியாபி; படைத்தல்,காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களுக்கும் அகரம் - உகரம்-மகரம் என்னும் மூன்றும் சேர்ந்த பிரணவப் பொருள். தம்மை போற்றி வழிபடுபவர்க்கு அறம்,பொருள்,இ இன்பம், வீடு என்னும் நான்கு உறுதி பொருளை அருளிவர். போற்றி வழிபடாதவர்களுக்கு தடுத்தாட் கொண்டு பின் நலம் பலவும் அருளி மறக்கருணை புரியும் இயல்பினர்.


''அகரமென அறிவாகி, உலகம் எங்கும் அமர்ந்து
அகர உகர மகரங்கள் தம்மால் பகரும் ஒரு
முதலாகி பல்வேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகலில் பொருள் நான்கினையும் இடர் தீர்ந்தெய்தல்
போற்றுநருக்கு அறக்கருனை புரிந்து அல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
திருமலனைக் கணபதி நினைந்து வாழ்வோம்."


ஆலய வரலாறு

சைவ சிந்தாந்தத்தில் ஈடுபாடுடைய திரு.பொன்னம்பல சுவாமிகள் இந்திய தேசிய படைக்கு, சிங்கப்பூர்க்குபணியாற்ற வரும் போது விநாயகரையும் உட ன் துணையாகக் கொண்டு வந்தார்.வணங்குவதை மறவாதுதினமும் விநாயகரை வழிப்பட்டு வந்தார். பணி முடிந்து இந்தியாவுக்கு திரும்பும்போது தனக்கு துணையாக இருந்த விநாயகரை இங்கேயே விட்டுச் செல்ல விரும்பினார். ஆகையால் இங்குள்ள நகரத்தாரிடம் விநாயகரை ஒப்படைத்து நாடு திரும்பினார். நகரத்தாரும் ஒரு சிறு குடில் அமைத்து விநாயகரை அங்கு வைத்து பூஜைகளும், வழிபாடுகளும் செய்யத் தொடங்கினர். திரு. ச ன்னியாசி என்பார் பூஜைகளுக்கும், வழிபாடுகளுக்கும் பொறுப்பாக இருந்து கவனித்து வந்தார். 1925 ௭ ல் இந்த விநாயகர் அமர்ந்தவிடம் இப்போதும் இருக்கும் சிங்கப்பூர் பொது மருத்துவமனை வளாகம்.அருகில் சிங்கப்பூர் மத்திய சிறைச்சாலை. கோவிலுக்கு செல்ல ஒரு சிறு ஒ ன்றையடி பாதையும் அமைக்கப் பெற்றது. முதலாம் உலக மகா யுத்தம் முடிந்த பிறகு பொது மருத்துவ மனையில் பணிபுரிந்தவர்களும்,மத்திய சிறைச்சாலையில் பணிபுரிந்து வந்த இந்தியர்களும் இந்த விநாயகர் கோவில் வந்து வழிப்பட்டு செ ன்றனர். காலப்போக்கில் கணிசமான அளவில் மக்கள் விநாயகரை நாடி வந்து வழிப்பட்டனர். காலப் போக்கில் விநாயகருட ன் நாகரும் வந்து சேர்ந்தார். பொறுப்பு வகித்து வந்த ச ன்னியாசி தமிழகம் செல்ல வேண்டிய சூழ்நிலை அமையவே, நகரத்தாரிடம்பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஊருக்கு செ ன்று விட்டார். நகரத்தார் சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியத்தை நாடினர். இதில் இந்து அறக்கட்டளை வாரியம் ஆர்வம் காட்டவில்லை.ஆகையால் நகரத்தாரேபொறுப்பினை ஏற்று ஒரு பண்டாரத்தை நியமித்து கோவிலை நடத்தினர்.

புதிய ஆலயம்

கோவில் அமைந்திருந்த இடம் அரசு பொது மருத்துமனைக்குரியது. மருத்துமனை விரிவாக்கததிற்கு இடம் தேவைப்பட்டதால் 1970-ல் அரசாங்கம் அந்த இடத்தை கையப்படுத்தி நிலத்திற்குரிய தொகையை கொடுத்தது. தற்போது அமைந்திருக்கும் இடத்தில் அரசு கொடுத்த தொகையில் புதிய ஆலயம் எழுப்பினர்.பழைய விநாயகருக்கு பதில் தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட புதிய கருங்கல் விநாயகரை ஆமக முறைப்படி �ஸ்தாபனம் செய்து மூலவராக வைத்தனர்.பொன்னபலம் கொடுத்து விநாயகரை மூல விக்கிரத்திற்கு எதிரில் வைத்தார்கள்.� முருகனுக்குரிய வேல் ஒன்றினையும் புதியதாக வைத்தனர். �'லாயின் சிட்டி விநாயகர் கோவில்' என்று புதிய கோவிலுக்கு பெயரிட்டார்கள். ஆரம்பக் காலத்தில் இக்கோயில் இந்திய தேசிய ராணுவத்தினர் குடியிருந்தப் பகுதியில் அமைந்திருந்தது. இந்திய சிப்பாய்கள்இருந்த பகுதியைக் கடந்துதான் கோவில் செல்லவேண்டும். கோவிலைக் குறிக்க சிப்பாய் லையின் கோயில்என்று அழைத்தார்கள். பிற்காலத்தில் சிப்பாய் மறைந்து ''லாயின் சிட்டி விநாயகர் கோயில்'' என்ற பெயர் காரணப் பெயராக அமைந்துவிட்டது.

திரு. பிச்சப்பா செட்டியார் என்பார் கிட்டாங்கி பகுதியில் (டேங் ரோடு) வேலை செய்து வந்தார். தெண்டாயுபாணி கோவில் டிரெஸ்டியாக இருந்தவர். திரு.பிச்சப்பா செட்டியார் ஒரு விநாயகர் விக்கிரத்தை வைத்து வழிப்பட்டு வந்தார். சில, பல காரணங்களால் தொடந்து விநாயகரை பூஜிக்க முடியாத காரணத்தால்விநாயகரை இந்த லாயின் சிட்டி விநாயகர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டார். ஆக தற்போதுஇவ்வாலயத்தில் மூன்று விநாயகர் பெருமான் இருந்து வருகிறார். டேங் ரோடு தெண்டாயுதபாணி கோவில் நகரத்தார் நிறுவாகத்தின் கீழ் இருந்தக் காரணத்தால் லாயின் சிட்டி விநாயகர் கோவிலும் அவர்கள் நிருவாகத்தின் பார்வையில் இருக்கிறது. தைப்பூசத்திற்கு முதல் நாள்வெள்ளி இரதம் டேங் ரோடு தெண்டாயுதபாணி கோவிலிருந்து புறப்பட்டு லாயின் சிட்டி விநாயகர் கோவில் வரை வந்து திரும்பி செல்லும். 1973,1989-ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைப்பெற்றுள்ளது. லாயின் சிட்டி விநாயகர் கோவில் சிறிதாகஇருப்பதால் கோவிலின் உட்பகுதியிலேயே பக்தர்கள் வலம் வருகிறார்கள். வேண்டுதல் நிறைவேறியர்கள் கோவில் உட்புறமாக 108 முறை வலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றி நிறைவுப் பெறுகிறார்கள். முக்கிய விழாக்களாக விநாயகர் சதுர்த்தி, வேல் அபிஷேகம், புத்தாண்டு, தீபாவளி, கார்த்திகை, பொங்கல்போன்ற விழாக்களும், மற்ற சமய விழாக்களும் நடைப்பெறுகிறது.


வள்ளற் பெருமான் இராமலிங்க சுவாமிகளின் உருக்கமான பாட்டு இங்கு கருதத்தக்கது!

'' திருவும், கல்வியும், சீரும், சிறப்பும், உன்
திருவடிப் புகழ்பாடும் திறமும், நல்
உருவும், சீலமும், ஊக்கமும், தாழ்வுறா
உணர்வும், தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா !
குருவும் தெய்வமும் ஆகி, அனபாளர்தம்
குணப் பெருங் குன்றமே !
வெருவும் சிந்தை விலகக் கஜானனம்விளக்கும்
சித்தி விநாயக வள்ளலே !
-சிங்கை கிருஷ்ணன்.

Wednesday, August 8, 2007

ஸ்ரீ இராமர் ஆலயம்

SRI RAMAR KOVIL


ஸ்ரீ இராமர் ஆலயம் (சாங்கி)





பழந்தமிழர் கண்ட சமயங்கள் இரண்டு. ஒன்று சைவம்;

மற்றொன்று வைணவம். சைவம் சிவபெருமானைமுதற்

முழு தெய்வமாக வழிபடுவது. வைணவமோ திருமால்

எனப்படும் விஷ்ணுவை வழிபடுவது. இந்து மத நெறிமுறை

களையும், நான்கு வேதங்களையும், ஆறு சாஸ்திரங்களையும் உபதேசத்தின் மூலம் நமக்கு வழிகாட்டிஎடுத்தியம்புவது இராமாயணமும், மகாபாரதமும். அடியார்கள் வழிபடும் இந்து

சமயத்தின் இரு கண்கள்!



இவ்விரு பிரிவுகள்.ஸ்ரீமன் நாராயணன் இவ்வுலகைக் காப்பதற்காகப் பற்பல அவதாரங்களை எடுத்துள்ளார்.பத்து அவ்வதாரங்களில்மானிடர் அவதாரம் தாங்கி இவ்வுலகில் அவதரித்தார். கிரேத யுகத்தில் வெண்ணிறம் கொண்டவனாகவும்;திரேதாயுகத்தில் பவள நிறம் உடையவனாகவும்; துவாபர யுகத்தில் பச்சை நிறத்தவனாகவும்; கலியுகத்தில்சியாமள வண்ணனாகவும் அருள்பாலிப்பதாக புராணங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம். இராமபிரான்பச்சை நிறத்தில் இருந்தாகச்சித்தரிக்கப்பட்டுள்ளார். கண்ணனும் கார்மேக வண்ணனாக வர்ணிக்கப்பட்டுள்ளான்.ஆழ்வார்களும் அவனை ‘பச்சைமாமலை போல் மேனி, பவளவாய் கமலச் செங்கண்’ என அவன் வண்ணங்களைப்புனைந்திருக்கிறனர்.



நீலமேகச்சியாமள என்றும் மகாவிஷ்ணுவை அணி புனைந்துள்ளனர்.இராமருக்குப் பாரதத்தில் மட்டுமி ன்றி பார்முழுவதுமே புகழ் உண்டு. தாய்லாந்து நாட்டின் அரசர்கள் தங்களை‘’ராமா’’ எ ன்று அழைத்துக் கொள்கிறார்கள்.



தற்போதுள்ள ம ன்னரின் பெயர் பூமிபால் அதுல்யதேஜ் 9 - வதுராமா ஆவார். கி.பி. 17-ம் நூற்றாண்டில் ‘தாய்’ மொழியில் இயற்றப்பட்ட ‘ ராமகீர்த்தி’ எனப்படும் ராமகாவியம்பள்ளிகளில் பாடமாகப் போதிக்கப்படுகிறது. தாய்லாந்து நாட்டுக்கு குத்துச் சண்டை விளையாட்டு, அனுமன், வாலி,சுக்ரீவன் போன்ற வீரர்களி ன் சண்டை முறைகளை அடிப்படையாகக் கொண்டது எ ன்பர். அவர்களது அரசியல்சட்டத்தில் ‘சியாம் தேசம்’ எனப்படும். சியாம் தேசம் என்றால் ‘விஷ்ணு நாடு’ என்று பொருளாகும்.



அங்குள்ளசில ஊர்களின் பெயர் அயோத்தி, லவபுரி, காஞ்சனபுரி.பினாங்கிலுள்ள (மலேசியா) ஒரு மசூதியின் பெயர்ப் பலகையில்‘’இந்த மசூதி 1974-ல் ஸ்ரீராம பாதுகையின்ஆணைப்படி கட்டப்பட்டது எ ன்று காணப்படுவதைக் காணலாம். மலேசிய அதிபர் பதவிப் பிரமாணம் செய்யும்போது ‘ஸ்ரீராம பாதுகாதுளி ஆணையாக’ என்று சொல்லித்தான் பதவி ஏற்பார். மலேசியப் பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் கி.பி. 13-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ‘ஹிகாய்த் செரிராமா’ என்ற மலாய் மொழிராமாயணம் பாடமாக இருக்கிறது. மலேசிய சுல்தானை ‘ராஜபரமேஸ்வர என்றும், ராணியை‘ராஜ பரமேஸ்வரி’எனவும், அவர்களது மகனை ‘ல்க்ஷ்மண’ எனவும் மலேசிய மக்கள் மரியாதையுடன்அழைக்கிறார்கள்.



சிங்கை மாநகரில் கடற்கரையை ஒட்டிய இடம் சாங்கி. இவ்விடத்தில்தான் அமைந்துள்ளஆலயம்தான் ஸ்ரீ இராமர் ஆலயம்.இரண்டாம் உலகப் போருக்கு முந்திய காலத்தில்,சிறிய கிராமமாக இருந்த சாங்கியில் தற்போதுஆலயம் அமைந்திருக்கும் இடத்தில், மரத்தடியின் கீழ் ஒரு சிறு வழிபாட்டு இடமாக ஸ்ரீ இராமர்ஆலயம் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டது.



அப்போது அங்கு வாழ்ந்த தமிழர்க்கு அதுவழிபாட்டுத் தலமாகத் திகழ்ந்தது. இந்திய இராணுவத்தில் பாலம் அமைக்கும் பொறியியல் பிரிவில் பணியாற்றிய திரு.ராம் நாயுடுஎன்பார் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, 1945 - ஆம் ஆண்டில் தற்போது ஸ்ரீ இராமர்ஆலயம் அமைந்துள்ள நிலப்பகுதிகளைப் பிரிட்டீஸாரிடமிருந்து பெற்று ஆலயம் அமைத்தார்.



ஆலயம் எழுப்புவதற்கு வேண்டிய ஆள் பலத்தையும், கட்டுமான தளவாடங்களையும் பிரிட்டீஸ்ஆயுதப் படையிடமிருந்து பெற்றார். மேலும் சாங்கி கிராமத்தில் வாழ்ந்த இந்திய மக்களின்ஆதரவையும் கொண்டு ஆலயம் எழுப்பினார். திரு. ராம் நாயுடுவுக்குப் பின்னர் இந்தவட்டாரத்தில் வாழ்ந்த மக்களே ஆலயத்தின் நிர்வாகம் ஏற்றனர்.காலம் மாற்றத்திற்குரியது.



காலத்திற்கேற்ப மனிதன், இயற்கை, சுற்றுபுற சூழ்நிலை மாறினாலும் காலம்காலமாய் மாறாமல் நிலைத்திருப்பது சான்றோர்களின், முன்னோர்களின்கருத்துக்கள், இதிகாசங்கள், தெய்வ வழிபாடுகள்.ஆலயத்தை மேலும் மேம்படுத்த விரும்பிய நிர்வாகத்தினர் மதுரையிலிருந்துஆலய சாஸ்திரமும், கட்டடக்கலையில் நிபுணத்துவம் பெற்ற மூவரை வருவித்துக்கோயில் பணியைப் தொடங்கினார்கள். ஆலயம் கடற்கரையை நோக்கிகிழக்கு முகமாக அமைந்திருப்பது இந்திய கோயிலமைப்புக்கு முக்கியசிறப்பாக அமைந்தது.



வைணவக் கோயிலாக இருந்தாலும், சைவ சமயத்தினரும் வழிபட வேண்டும்என்ற பரந்த நோக்கில் அமைந்தது ஆலயம். கடற்கரைக்கு அருகிலிருப்பதால்,ஈமச் சடங்கிற்குப் பிறகு, கோயிலில் சிறப்பு வழிபாடு செய்வதற்காகசிவலிங்கம் பிரஷ்டை செய்யப்பட்டது.நகர விரிவாக்கம், புதிய வீடமைப்பு பேட்டை எனப் புத்தாக்கம் பெறும்போதுபழையன் கழிதலும், புதியன தோற்றுவதும் இயல்பு. புதிய சாலை வசதிகளும்,மேம்பாடும் வரவிருந்த காரணத்தால், ஆலயம் புதிய இடத்திற்க்கு பெயரசூழ்நிலை உருவாகியது. இப்பகுதியை ஒட்டிய லோயாங் அவென்யுவில்புதிய சாலை உருவான போது கோயில் தொடர்ந்து இருக்குமா என்றஐயம் தலைதூக்கியது.



அச்சமயம் அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினராகஇருந்த திரு. தியோ சொங் தீ தலையிட்டு உதவியிருக்காவிட்டால்கோயில் இப்போதிருக்கும் இடத்தில் இருந்திருக்காது.1993 - ஆம் ஆண்டு கோவில் முறைப்படி அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டது.நகர சீரமைப்பு காரணத்தால் சிங்கப்பூரின் மற்ற பகுதியிலிருந்த கோயில்கள்பாதிக்கப்பட்டன. சிறு கோவிலாகவும், பொருளாதாரத்தில், நிதி நிலையில்நிறைவாக இல்லா கோயில்களை ஒற்றிணைத்து ஒரே இடத்தில் வழிபாட்டுத்தலம் அமைக்க அரசாங்கம் ஒரு யோசனையை முன் வைத்தது.



அதன்படி மூன்று கோவில்கள் இணைந்தன.1. காண்டோன்மெண்ட சாலையில் அமைந்திருந்த மன்மத காரூணீஸ்வரர் ஆலயம்.2. புக்கிட் தீமா குதிரைப் பந்தய வளாகத்தில் அமைந்திருந்த முத்து மாரியம்மன் ஆலயம்.3. கிராஞ்சி கடற்கரையில் அமைந்திருந்த பழனி ஆண்டவர் ஆலயம்.மேற்கண்ட மூன்று சிறு கோயில்களும் இராமர் ஆலயத்துட ன் ஒன்றிணைந்து ஒரே ஆலயமாகியன.2004 - ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆலய நிர்வாகம் ஒரு ஆஞ்சநேயர் சிலையை அமைக்கஎண்ணியது. அதன்படி 21அடி உயர ஆஞ்சநேயரைத் தமிழ் நாடு ஸ்தபதி திரு.கிருஷ்ணமூர்த்திமேற்பார்வையில் சிலை வடித்து 2005 -ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.



காலப்போக்கில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பாசிர் ரிஸ், சீமேய், ஈஸ்ட் கோஸ்ட்பகுதிகளில் வீடமைப்பு பேட்டைகள் தோன்றத் தொடங்கியதால் அங்குள்ள மக்கள் இராமர்கோயிலை நாடி வரத் தொடங்கினர். அதற்கு ஏற்பச் சமய நிகழ்ச்சிகளும், விழாக்களும்மக்களின் தேவையை மனதில் கொண்டு ஆலய நிர்வாகம் பூர்த்திச் செய்தது.இராம நவமி, ஹனுமன் ஜெய்ந்தி,கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி விழா, ஆடி பெருக்குதிருவிழா, திருவிளக்குப் பூஜை, சுதர்சன, சண்டிஹோமங்கள் எனச் சமய விழாக்களும்,சமூக, மற்றும் கல்வித் தேவைகளையும் கோயில் நிறைவு செய்தது. இவ்வட்டாரத்தில்ஏற்பட்டு வரும் சமுதாய மேம்பாடுக்குத் தேவைக்கு ஏற்ப, கோயிலின் சிற்ப வேலைகள்,வர்ண பூச்சு, புதிய விக்கிரங்கள் பிரதிஷ்டை செய்தல், சீரமைப்பு போன்ற பணிசெய்யப்பட்டது.பல இன மக்கள் சேர்ந்து வாழும் சிங்கப்பூர் சூழ்நிலைக்கு ஏற்ப, புத்த பிரான் மற்றும்சீன தெய்வமான குவான் இன் ஆகிய தெய்வங்களின் சிலைகளும் இடம் பெற்றனர்.



சில சிங்கப்பூர் இந்து ஆலயங்களில் புத்த பெருமானும் இடம் பெற்றுள்ளார். புத்தரின்போதனைகள் நமது இந்திய மக்களையும் கவர்ந்துள்ளதால் பலர் புத்தரையும் வணங்குவதுண்டு.புத்தபிரான் நமது இந்திய தெய்வங்களின் அவதாரங்களில் ஒன்று என்று கருதும் இந்துக்களும்உண்டு. புத்தபிரானின் அருளையும் மக்கள் பெறவேண்டும் என்ற நோக்கில் புத்தரின்திருவுருவமும் இங்கு இடம் பெற்றுள்ளது.மற்றும் ஒரு சமய நல்லிணக்கமாகச் சாங்கி இராமர் கோயில் குவான்யின் எனும் சீனதேவதைக்கும் இடமளித்துள்ளது. புத்த பாரம்பரியத்திலிருந்து வந்த கருணைத் தெய்வம்தான்குவான் யின். சீனா, வியட்னாம், ஜப்பான், பாலி ஆகிய நாடுகளில் இந்தக் கருணைத்தெய்வம் பல பெயர்களால் வழிபடப்படுகிறது.



பல பெயர்களைப் பெற்றிருப்பினும் இத்தெய்வம்கருணை, அன்பு, பரிவு ஆகியவற்றின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. மக்களின், பக்தர்களின்மனக் குறைகளை இத்தெய்வம் கேட்கப்படுவதாக நம்பபடுகிறது. ஒளிவீசும் முத்துக்களும்,குடத்திலிருந்து ஊற்றும் நீரும் குணமளிக்கும் என்றும், இந்த நீர் மூலம் எல்லா உயிரினங்களும்நன்மையும், சுபிட்சமும், ஆன்மீக அமைதியைப் பெறுகின்றன என்றும், கைகளில் ஏந்திருக்கும்நெற்கதிர் அல்லது அரிசிக் குவளை வளப்பமான வாழ்வைக் குறிப்பதாகவும், பெண்களைக்காக்கும் கன்னித் தெய்வமாகும் எனவும் நம்பப்படுகிறது.திருமணம் செய்ய விரும்பாத பெண்களுக்கு ஆன்மீக, சமய வாழ்க்கையை மேற்கொள்ளவும்,இல்லறத்தில் ஈடுபடும் பெண்களுக்கு நிறைவான வாழ்க்கையையும், மழலை செல்வமும் குறைவற அளிக்கும் தெய்வமாக குவான் யின் சித்தரிக்கப்பட்டிருக்கிறதுசிங்கப்பூர் கிழக்குப் பகுதியில் வாழும் சிங்கப்பூரர்களின் ஆன்மீக தேவைகளைசாங்கி ஸ்ரீ இராமர் ஆலயம் தொடர்ந்து சேவை செய்து வருகிறது.



ஆலய முகவரி:-

Sri Changi Village Road,
51 Changi Road,Singapore. 509908.
Tel. 65431463


-சிங்கை கிருஷ்ணன்

ஸ்ரீஅருள்மிகு வேல்முருகன் ஆலயம்.

VELMURUGAN GNANAMUNEESWARAR TEMPLE

ஸ்ரீஅருள்மிகு வேல்முருகன்

ஞானமுனீஸ்வரர் ஆலயம்.

செங்காங் ரிவர்வேல் கிரசண்டில் அருள்மிகு வேல்முருகனுக்கும், ஞான முனீஸ்வருக்கும் அமைப்பட்டிருக்கும்ஆலயம் பலவிதங்களில் தனித்தன்மை வாய்ந்த ஒன்று. இருபதாம் நூற்றாண்டின் சிங்கப்பூரில் அமைந்த முதல்ஆலயம் இதுவாகும். நவீன கட்டிட வடிவமைப்பில் பல உன்னதங்களைப் பெற்றுள்ளது. அதே வேளையில்தென்னிந்திய ஆலய சாஸ்திரங்கள் அனைத்தையும் உள்ளடக்கி இது வடிவமைக்கப்
பட்டுள்ளது.

புதிய ஆலயத்தின் அலங்காரக் கலைநயம், சிற்பங்கள், பிரமிக்க வைக்கும் கூடங்கள், சன்னிதிகள் யாவும்மாறுபட்ட கலையழகுடன் அமைக்கப்பெற்றுள்ளன. ஆலயத்தின் கம்பீரத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகப்பிரதான சன்னிதிக்கு உயரே மாடம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

இது வழக்கமான கோபுரத்திலிருந்துமாறுபட்டது. மண்டபத்துக்கு வெளியிலும் நடைபாதைகளிலும் காணப்படும் சிற்பங்கள் நம்மை மெய்மறக்க வைப்பவை


நிலப் பற்றாக்குறை உள்ள சிங்கப்பூரில், விரைவான மாற்றங்கள் பெற்று வருகின்றன.. பல இன மக்கள்,மக்களின் தேவைக்கு ஏற்ப வீடமைப்பு, சமய வழிபாட்டுத் தலம் போன்றவைகள் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.அதற்கேற்ப அரசாங்கம் வழிமுறைகளை மேற்கொள்கிறது. இந்த நூற்றாண்டில்கோயில் அமைந்த முதல் கோயில் இதுவெனலாம். வேல்முருகன் ஞான முனீஸ்வரர் ஆலயம்இன்றைய சிங்கப்பூர் மக்களின் விருப்பத்தை மனதில் கொண்டு, நமது சமய தேவைகளையும்அதே வேளையில் நாட்டுக்கு அவசியமானவற்றையும் ஈடு செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.

ஆலயத்தைச் சுற்றி நவீன அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டிடங்களுகும் ஒருங்கிணைந்து போகும்வகையில் ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தை அடுத்து பெளத்த, தாவோ (சீன)ஆலயங்கள் உள்ளன. மற்ற பல இன மக்களுடன் ஒருங்கிணைந்து போகும் போக்கு இது.மற்ற சமயத்தினருடன் நெருக்கமான,இணக்கமான தொடர்பு கொண்டிருப்பது, பல இன ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது. பல சமய வழிப்பாட்டு இடங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் எண்ணற்ற நன்மைகளும், புரிந்துணர்வும், தொலை நோக்கு எண்ணமும் ஏற்படும்.

ஆலய வரலாறுஸ்ரீ ஞான முனீஸ்வரர்1940- களில் சிலேத்தார், ஜாலான் காயு ஆகிய பகுதிகளில் இந்திய குடியேறிகளாக இருந்தநம்மவர்கள் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி, ஸ்ரீ கிருஷ்ண பகவான், ஸ்ரீ மாரியம்மனை வழிபட்டு வந்தார்கள்.

தெய்வீக அருள் கொண்ட இக்கோயிலில் வழங்கப்பட்ட பால் பாயசம் பிரதாசம் பலரையும் ஈர்த்தது.அப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்குச் சனிக்கிழமை தோறும் சுவை மிகுந்த பால் பாயசம் பிரசாதமாகவழங்கப்பட்டது. பால் அந்த கோயிலுக்குச் சொந்தமான பசுவிடமிருந்து பெறப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது. அந்தப் பசு நாள்தோறும் அதிகமான பாலைச் சுரந்ததால் கோயில் தேவைபோக மிஞ்சிய பாலை மற்ற கோயிலுக்கு அனுப்பி வைத்தார்கள்.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ கைலாய கணபதி, ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ முத்து மாரியம்மன்,ஸ்ரீ ஞான முனீஸ்வரர், ஸ்ரீ வீரபத்திரர் ஆகிய சன்னிதிகளும் இருந்தன.அக்கோயில் பக்தர்களுக்குப்பல அபூர்வ அனுபவங்களும், அதிசய சம்பவங்களும், தெய்வ நடமாட்டங்களை கண்டுள்ளனர்.
இரவு நேரங்களில் ஸ்ரீ ஞான முனீஸ்வரர் கையில் அரிவாளுடன், காலில் சலங்கையுடன்சுருட்டு புகைத்தவாறு நடந்து சென்றதைப் பலர் பார்த்துள்ளார்கள். அப்பகுதியில் வாழ்ந்தமக்கள் இன்றும் அத்தெய்வங்களைப் பயபக்தியுடன் வழிபட்டு வருகிறார்கள்.

அருள்மிகு வேல் முருகன்

ஆரம்ப காலங்களில் தஞ்சோங் பகார் துறைமுகப் பகுதியில் நிறைய தமிழர்கள் வாழ்ந்து வந்தார்.அப்பகுதியிலேயே அமைந்திருந்த மலாயன் இரயில்வே குடியிருப்புகளிலும் தமிழர்கள் அதிகமாக இருந்தனர்.1960 ஆண்டு சீலாட் சாலையில் அருள்மிகு வேல் முருகன் கோயில் கட்டப்பட்டது. அப்பகுதி வாழ்இந்தியருக்கு இந்த அருள்மிகு வேல் முருகன் ஆலயம் சமய வழிபாடு தேவைகளை நிறைவேற்றிவந்தது. பங்குனி உத்திரத்தன்று காவடிகள் தூக்கி தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்திவர்கள்இன்றும் நினைவு கூறுகிறார்கள்.

இந்தக் கோயில்கள் அமைந்திருந்த இடங்கள் நகர மேம்பாட்டிற்கு இடம் கொடுக்க வேண்டிஇருந்ததால் மாற்று இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறிய கோயிலாகையால்வருமானமும் குறைவாகவே இருந்தன. பொருளாதாரத்தில் தன்னிறைவு இல்லாத காரணங்களால்புதிய கோயிலை எப்படி கட்டுவது என்று கோவில் நிர்வாகம் கவலை கொண்டது.

ஸ்ரீ ஞான முனீஸ்வரர், அருள்மிகு வேல் முருகன் கோயில்களை நிர்வகித்து வந்த நிர்வாகிகள்புதிய கோவில்கட்டும் வரை விக்கிரங்களுக்கு நிலையான ஒரு வழிபாட்டு இடம் வேண்டும்என்ற விருப்பம் கொண்டிருந்தனர். உட ன் கோயில் கட்ட உகந்த இடமும் கிடைக்கவில்லை.பொருளாதாரமும் இல்லாத காரணத்தால், இடைப்பட்ட காலத்தில் சிராங்கூன் ரோட்டிலுள்ளஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில் வளாகத்திலிருந்து செயல் பட எண்ணியர்.கோயிலைக் கட்டபெருமளவில் நிதி சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு குடையின்கீழ் வந்தார்கள்.












சிங்கப்பூரில் நிலப்பற்றாக் குறை நிலவிய காரணத்தாலும், சமூக தேவைகளைப் பூர்த்தி செய்யும்வகையில் ஆலயம் அமைய வேண்டும் என்ற முக்கிய குறிக்கோளும் இருந்து வந்தது.வெவ்வேறுவழிபாட்டுப் பாரம்பரியங்களையும் பின்னணி கொண்ட மூன்று கோயில்கள் ஒரே கோயிலாகஇணைந்து ஒரு நிர்வாகத்தின் கீழ், இந்து அறக்கட்டளை வாரியத்தின் உதவியுடன் ஒரேகூரையின் கீழ் கொண்டு வரப்பட்டன.பல்வேறு தடைகளும், சிரமங்களும் இருந்தாலும்நம்பிக்கையும், மனவுறுதியை கைவிடாது செயல் பட்டனர்.

2000- ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து அருள்மிகு வேல்முருகன், முனீஸ்வரர்கோயில்.இப்போது அமைந்துள்ள செங்காங் வட்டாரத்தில் தங்கள் கனவு ஆலயத்தைஎழுப்ப ஆறு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக நிதி திரட்டி நயன்மிகு,கலைமிகு ஆலயம் கட்டினார்கள்.

தமிழில் லட்ச அர்ச்சினை...!

இங்கு தமிழில் இலட்ச அர்ச்சினை மந்திரங்கள் ஓதப்படுகின்றன.சமய நல்லிணக்கதை ஊக்குவிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பக்கத்தில் அமைந்திருக்கும்பெளத்த மடம், சீன லியோங் சான் ஆலயம் ஆகியவற்றுடன் இணைந்துதெய்வீக தீப ஊர்வலத்தை நடத்தி வருகிறார்கள்.

ஒரு பிள்ளைக்கு நாம் அளிக்கக் கூடிய சிறந்த பரிசு கல்விதான். கல்வி பயணத்திற்குஅடிப்படை பாலர் கல்வி.அருள்மிகு வேல்முருகன் ஞான முனீஸ்வரன் ஆலயம் பாலர்வகுப்புகளைத் தற்போது நடத்தி வருகிறார்கள்.தமிழ் வருடப் பிறப்பு, பஞ்சாங்க வாசிப்பு,பங்குனி உத்திர விழா,சிவராத்திரி, பிரதோஷம், அன்னையர் தினம்,சிங்கப்பூர் தேசிய தினத்தையொட்டி சந்தன குடம் விழா என்றும் இந்து சமயவழிபாடுகளுடன் மற்ற முக்கிய சமய விழாக்களும் ஆலயத்தில் நடந்தேறி வருகின்றன.

VELMURUGAN GNANAMUNEESWARAR TEMPLE,
50, River Vale Cresant,
singapore
Tel 62946739

-சிங்கை கிருஷ்ணன்.

Thursday, August 2, 2007

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்


Nee Soon Sri Maha Mariammam

ஸ்ரீ மகா மாரியம்மன்

[ஈ சூன்]

சிங்கப்பூர்த் தீவு, ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்துவக்கத்தில் கிழக்கிந்திய கம்பெனியின்பார்வையில் இருந்த காலம் ‘’திரை கடலோடியும் திரவியம் தேடு’’ எனும் முதுமொழிக்கிணங்க,இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் வர்த்தகம் செய்யவும், உடல் உழைப்புத் தொழிலாளர்களாகவும்தென்கிழக்காசிய நாடுகளில் குறிப்பாகச் சிங்கை, மலேசியாவிலும் குடியேறிய காலம்.

’கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’’ என்பது இந்துக்களின் இறைவழிபாட்டிற்குஏற்பட்ட இலக்கணம். தாய் நாட்டை விட்டு வெளி நாடு வந்தபோதிலும், இறை வழிபாட்டைமறவாத இந்துக்கள் கோவில் கட்டி, தங்கள் மதம், கலாச்சாரம், மொழி ஆகியவற்றை மறவாதுஒழுகி நிற்கத் துடித்த காலம், தங்களின் சக்திக்கேற்ப ஆங்காங்கே சிறு குடில்களாகக்கோவில்களை அமைத்து வழிப்பட்ட காலம் கூட.
அந்த சூழ்நிலையில்தான் சுமார் 75 ஆண்டுகள் முன் அமைந்த பழைமையான [ஈ சூன்]ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம். சிங்கப்பூரின் வட பகுதியிலமைந்துள்ள ஆலயம் இரண்டாம்உலகப் போருக்கு முன்பாக இங்கு வாழ்ந்த தமிழர்கள் மகா மாரியம்மைனை வழிபடும்தெய்வமாகக் கொண்டு வாழ்ந்துள்ளார்கள்.

எழுத்து வடிவத்தில் எந்த வரலாறும் இல்லாத நிலையில், வாய் மொழியாகக்கூறப்படும் வார்த்தைகள்தான் வரலாறு எனக்கொள்ள வேண்டும்.

மாரி எனும் சொல்லுக்கு மழை என்று பொருளாகும். நிலத்தைப் பூமாதேவி என்றும், கல்விக்குச்சரஸ்வதி என்றும், செல்வத்திற்குச் திருமகள் என்றும், மலையில் தோன்றியவள் மலைமகள்என்று அழைக்கிறோம். அதே போல் மழை தருபவள் மாரியம்மன். வெப்பமாகிய வெம்மையைத்தவிர்த்து நமக்கும் இந்த பூமிக்கும் குளிர்ச்சியைத் தருபவள் மாரியம்மன்.

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதற்பெருங்காவியம். பெருங்காவியம். அதில் இளங்கோவடிகள்மழையை வணங்கி,வாழ்த்திப் போற்றும் பாடல்:-
‘’மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்விளகுவீர் வேலி உலகிற்குஅவன் குலத்தோடு ஓங்கி பரந்து ஒழுகலான்’’
மழையைப் போற்றி வழிபடும் மரபை அதற்குரிய காரணமாகத் தன் கருணைத் தன்மையைஎன்பதை அறியலாம்.

அதுபோல் மாரியம்மனும் வழிபடுதற்குரிய தண்கருணை தன்மையுடைவளாகஇருப்பதை நாம் உணரலாம். உலகைக் காப்பற்றும் சக்தி மழைக்குண்டு. அது போன்று உலகைக்காப்பாற்றும் மாரி அம்மன் அன்னையே தாயாக, நெஞ்சை நெகிழ்துருகச் செய்யும் நீராக,உயிரினங்களை வாழவைக்கும் ஒப்பில்லா மழையாக, கருணை மழை பொழியும் காரிகையாகஇருப்பதால் தமிழர்கள் பலவடிவிலான அம்மனை இங்கு மாரியாக வழிபடுகிறார்கள்.

கோயில் வரலாறு...

சிறுகுடிலில் மரத்தினால் செய்த மாரியம்மன் சிலையைச் செம்பவாங் எஸ்டேட் தோட்டத்தொழிலாளர்கள் வழிபட்டு வந்தாக சொல்லப்படுகிறது. பிறகு அம்மனின் திருவுருவம் சுதையினால்செய்யப்பட்டுச் செம்பவாங் இரப்பர் தோட்டத்தில் ஒரு சிறிய ஆலயத்தில் வைக்கப்பட்டதாகக்கூறப்படுகிறது. இவ்வாலயம் அப்பகுதியில் வசித்த மக்களுக்கு ஒரு முக்கிய சந்திப்பு இடமாகஅமைந்தது.

இரண்டாம் உலக போர் 1941-1945 வரை போர் மேகம் சூழ்ந்திருந்த காலத்தில்,உயிர்க்கே உத்திரவாதம் இல்லாத நிலையில் ஜப்பானியரின் கொடுமையான ஆட்சியில் ஆலயத்தைச்சரிவர பராமரிக்க இயலாமற்போனது. ஜப்பானியர் வீழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர் ஆட்சி வந்தபோதும், முன்போல் தமிழர்கள் கூடுதலாகத் தோட்ட தொழிலாளர்கள் வரவில்லை. ஆகையால்செம்பவாங் 12-வது மைலில் இருந்து வந்த ஆலயத்தை 7-வது மைலிருந்த செம்பவாங் ஹில்ஸ்(Sembawnag Hill) எஸ்டேட்டிற்கு இடம் மாறியது என்று நம்பபடுகிறது.

ஆலயத்தைப் பராமரிப்பதில் தொடர்ந்து இடர்களும், சிரமமும் ஏற்பட்டதால், 1948- ம் ஆண்டுசில தொண்டர்களின் முயற்சியால், நீ சூன் பகுதியில் [மண்டாய் ரோடு] 10-வது மைலில் ஆலயம்அமைக்கப்பட்டது. 1950 -களில் சுதையிலான தெய்வச் சிலைகள், மகாபலிபுரத்திலிருந்துதருவிக்கப்பட்ட கருங்கல் விக்கிரங்களாக, ஸ்தாபனம் செய்து குடமுழுக்கு செய்யப்பட்டது.1971-ம் ஆண்டு மற்றும் ஒரு புதுப்பிப்பு பணிக்குப் பிறகு கும்பாபிஷேகம் கண்டன.
மாரியம்மன், விநாயகர், முருகன், சிவன், கிருஷ்ணர் ஆகிய விக்கிரங்களுடன் சனீஸ்வரன்,நாகர் ஆகிய விக்கிரங்கள் ஸ்தாபனம் கண்டது. அப்போது ஆலயத்தின் கூரையில் கலசம் ஒன்றும்அமைக்கப்பட்டது.

நகர விரிவாக்கமும், நகர சீரமைப்பும் விரைவாக நிகழ்ந்ததால் 1981 - ஆண்டில் சிங்கப்பூர்அரசாங்கம் புதிய ஆலயத்திற்கான புதிய இடத்தினைத் தேர்ந்தெடுக்கும்படி கோரியது. ஆலயம்புதிய வீடமைப்புப் பேட்டை அருகில் அமைக்கவும், பொது போக்குவரத்து மூலம் எளிதில்கோயிலுக்கு வரக்கூடிய சாத்தியத்தைக் கவனம் கொள்ள வேண்டியதாகியது.

அதன்படி 1993- ஆம் ஆண்டு ஈ சூன் வீடமைப்புப் பேட்டையில் 2000 ச.மீட்டர் அளவில்30 வருட கால குத்தகைக்கு நிலம் 5 இலட்ச வெள்ளிக்கு ஒதிக்கீடு செய்தது.

1994 -ஆம் ஆண்டு தொடங்கி ஆலய கட்டுமான பணி 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்,8-ம் நாள் பால ஸ்தாபன கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தேறியது.

மாரியம்மன் கோவிலின் மூலவர் அன்னை ஸ்ரீ மகா மாரியம்மன். கருவறை, முகமண்டபம்இவைகளுடன், கருவறைக்கு மேலே இரண்டு தலங்களுடன் எண் வடிவத்தில் விமானம்அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் இரண்டு தலத்திலும், பராசக்தியின் சிறப்பானஅவதாரமான சிலைகள் செய்யப்பட்டுள்ளன. பதினான்கு வடிவங்களில் அம்பாள் வீற்றிருக்கிறாள்.தெற்கு புறத்தில் விநாயகப் பெருமானும், வடக்குப் பக்கத்தில் பாலமுருகன் சன்னதியும்.மாரியம்மன் சன்னதியின் தெற்குப்புறம் சரஸ்வதி, துர்க்கை, பெரியாச்சி ஆகிய மூர்த்தங்கள்உள்ளன. வடக்குப் பக்கம் கிருஷ்ணர், மகா லட்சுமி, சிவபெருமான் அருவத் திரு மேனி,வெங்கட பெருமாள் மூர்த்தங்களும், கோவிலின் வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள்மண்டபம் அமைந்துள்ளன.

உலக நாயகியாக விளங்கும் அம்பாள் அவதாரம் பலப்பல. அவைகள் 108 சக்தி பீடமாகபாரதம், பங்களா, பாகிஸ்தான் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இந்த 108 அம்பாளை அங்கலட்சணங்களுடன், ஆயுத அமைப்புடன் இந்த கோவில் பிரகாரத்தில் சுதை வடிவில் அமைந்துள்ளது.இந்த சுதை வடிவிலான 108 அம்பாள் வடிவங்கள் சிங்கப்பூரின் மற்ற ஆலயங்களில் காண கிடைக்காதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

விழாக்கள்.....

கொடி மரத்துடன் தங்க முலாம் பூசிய 108 கலசம் ஆலயத்தை அலங்கரிக்கிறது.ஆடிமாதம் அம்மனுக்குரிய மாதமாகையால் இக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.மற்ற விழாக்களான நவராத்திரி, சிவராத்திரி, தமிழ் வருடபிறப்பு, பிரதேஷம், திருவிளக்கு பூஜை இன்னும்முக்கிய சமய திருவிழாக்கள் நடைபெறுகிறன்றன.

அம்மையே! ஆத்தாள் உண்மையே! உமையே! ஒப்பற்றவளே நீயே!அகிலம் முழுவதும் நிறைந்தே அழகினை பொழிபவளே! மாயே!இம்மை உலகில் எல்லா நலன்களும் பெற்றிடவே ஏற்றருள் இயக்கி மயக்கி எடுத்தே அணைத்து அனைத்தையும் அளிப்பவளே!

நன்மை எதுவென நானறியச் செய்தருள்வாய் என் கண்ணே!
நாடியும் பாடியும் நயந்தே உன்னடி பற்றிட செய்வாயே!
புன்மைகள் தீர்த்துப் புலன்களை அடக்கிப் பற்றிடச் செய்வாயே!பொல்லா வினையேன் என்னையே புத்தி தந்து ஆள்வாயம்மா!

Sree Maha Mariamman Temple,
251 Yishun Avenus.Singapore. 769061
Tel : 6756 6374 – 6756 1208.
Fax.6756 6084.


-சிங்கை கிருஷ்ணன்.

ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரன் ஆலயம்


Veeramuthu Muneeswarar Temple


ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரன் ஆலயம்

ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரன் கோயில் மற்ற ஆலயங்களிலிருந்து சற்று மாறுப்பட்டது.ஹோக் ஹ¤வாட் கெங் [Hock Huat Keng] என்னும் சீனக் கோயிலுள் வாளகத்திலேயேஇருந்து எல்லா வகை பூஜை, வழிபாடுகளை ஏற்று கம்பீரமாக அருள்பாலித்து வருகிறார்.

சீனக் கோயிலில் இந்து சமய வழிபாடா? கேட்பதற்கு புதுமையாகவும், வியப்பாகவும்இருக்கிறது அல்லவா? ஆனால், உண்மை. சிங்கப்பூரில் முதன் முறையாக சீனக் கோயில்வளாகத்தில் இந்து கோவில் ஒன்று வழிபாடு நடத்தி வருகிறது. ஈ சூன் தொழிற் பேட்டையில்ஹோக் ஹ¤வாட் கெங் சீனக்கோவில் வளாகத்திலேயே ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரன் ஆலயம்உள்ளது. பக்தர்கள் தாராளமாக வழிபட ஆலய அதிகாரிகளுடன் சேர்ந்து ஹோக் ஹ¤வாட் கெங்ஆலய அதிகாரிகள் சிறப்பான ஏற்பாடு செய்து தந்துள்ளார்கள்.

ஆலய வரலாறு...

நூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட இவ்வாலயம் என்றாலும்,1930-ம் ஆண்டிலிருந்து செயல் பட்டுவந்துள்ள ஆதார சான்றுகள் உள்ளன.சிங்கப்பூரில் ‘கம்போங்’ (கிராமம்) எனக்கூறப்படும் இயோ சூச் காங்,சாலையில் அமைந்துள்ள டிரக்.32 (Track.32)-யில் சிறிய மண் குன்றின் மீது ஒரு கருங்கல்லைஸ்தாபம் செய்து அதற்கு ‘’வீரமுத்து முனீஸ்வரன்’’என்று பெயரிட்டு வழிபட்டனர்.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் செடிகொடிகளுடன், காடுகளும், புதர்களும் நிறைந்த இடமாகஇருந்தாலும் மக்கள் அங்கு குடியிருந்தனர். இந்தியர்களில் பெரும்பாலும் உடல் உழைப்புத்தொழிலாளர்களாக இங்கு குடியிருந்தனர். பொது மராமத்து (PWD) இலாக்காவின் (குவாட்டர்ஸ்)குடியிருப்பும் இருந்தது. பெரும்பாலும் இந்தியர்களாக இருந்த காரணத்தால் தங்கள் வழிபாட்டுக்குஒரு இடத்தினைத் தேர்தெடுத்தார்கள். அவ்விடம் ஹோக் ஹ¤வாட் கெங் சீனக் கோவில்அருகாமையிலேயே அமையப்பெற்றது.

இப்பகுதி பெரும் காடாக விளங்கியதால் புலிகளின் நடமாட்டமும் இருந்தது. இந்த புலிகள்அடிக்கடி ஹோக் ஹ¤வாட் கெங் சீனக் கோவிலுக்கு வந்து ஓய்வு எடுப்பதாகவும் கூறப்படுகிறது.ஆனால் புலிகளால் எந்த தீங்கும் ஏற்பட்டதில்லை. இதனை நம்மவர்கள் முனீஸ்வராகவும், சீனர்கள்இதனைத் தங்கள் தெய்வீக வாரிசு என கருதி ஹோக் ஹ¤வாட் கெங் சீனக் கோவிலில்‘துவா பேக் கொங்’ என்ற சீனத் தெய்வத்துடன் புலியின் சிலையையும் வைத்து வழிப்பட்டனர்.
காலவோட்டத்தில் புலிகளின் நடமாட்டம் குறைந்தாலும், புலியின் உறுதல் சப்தத்தினையும்,முனீஸ்வரனின் நிழலுருவையும் சில பக்தர்கள் கேட்டும், பார்த்தும் உள்ளார்கள்.

கடந்த காலத்தில் பொத்தோங் பாசீர் வட்டாரத்தில் ஒரு பெரிய புளிய மரத்தடியின் கீழ்முனீஸ்வரனை வைத்து சிலர் வணங்கி வந்தனர். நகர சீரமைப்பின் காரணமாக அரசாங்கம்அந்நிலத்தினைக் கையப்படுத்தவே திரு. குரும்பையா என்பார் தலைமையில் அக்கோயில்தொண்டர்கள் இக்கோயிலுடன் இணைந்து இந்நாள் வரை சேவையாற்றி வருகிறார்கள்.

நகர விரிவாக்கத்திற்கும், மேம்பாட்டிற்கும் இயோ சூச் காங், சாலையிலிருந்து புதியஇடத்திற்கு ஆலயம் மாற வேண்டி கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே, நம்மவர்கள் போல் அவர்களும்வழிபடும் தெய்வத்தை அணுகி இடம் பெயர அனுமதி வேண்டி அருள் வாக்கு கேட்டுள்ளனர்.‘என் அண்ணன் முனீஸ்வரன் வந்தால்தான் நானும் வருவேன்’ என்ற செய்தி அவர்களுக்குவியப்பை அளித்தது.நகர விரிவாக்கத்திற்கும், மேம்பாட்டிற்கும் இயோ சூச் காங், சாலையிலிருந்து புதியஇடத்திற்கு ஆலயம் மாற வேண்டி கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே, நம்மவர்கள் போல் அவர்களும்வழிபடும் தெய்வத்தை அணுகி இடம் பெயர அனுமதி வேண்டி அருள் வாக்கு கேட்டுள்ளனர்.‘என் அண்ணன் முனீஸ்வரன் வந்தால்தான் நானும் வருவேன்’ என்ற செய்தி அவர்களுக்குவியப்பை அளித்தது.

ஹோக் ஹ¤வாட் கெங்[Hock Huat Keng] சீனக்கோவில் நிருவாகத்தினர்£ரமுத்து முனீஸ்வரனை அணுகி விபரம் கூற, நம்மவர் முனீஸ்வரனும் சம்மதித்தார்.

அதன்படி 1998 ஆண்டு புதிய ஈ சூன் தொழிற் பேட்டை வட்டாரத்திற்கு இருவரையும்அழைந்துச் செல்ல ஏற்பாடு ஆகியது. நாளும், நேரமும் குறிக்கப்பட்டது. குறிக்கப்பட்ட நாளில்இரவு எட்டு மணிக்கு இருவரும் புறப்பட காலையிலிருந்து ஏற்பாட்டு பணித் தொடங்கியது.காலை பத்து மணிக்கு பதித்த முனீஸ்வரனுக்குரிய வேலை எடுக்க கீழிருந்த சிமெண்ட்மேடைடை உளியால் உடைக்க ஆரம்பித்தனர்கள் தொண்டர்கள். மதியம் வரை, மாலைவரை, இரவு வரை உடைக்கவே முடியவில்லை.

நேரம் ஓடிக்கொண்டு இருந்தது. இரவு எட்டாகிவிட்டது.மூனீஸ்வரனின் வேல் நகரவில்லை.

இதற்குள் ஹோக் ஹ¤வாட் கெங்[Hock Huat Keng] சீன ஆலயத்தார்கள்புறப்பட தயாராகிவிட்டார்கள்.இறுகியாக ‘துவா பேக் கொங்’ சிலையை மட்டும் வாகனத்தில் தூக்கி வைக்க வேண்டியதுதான் பாக்கி. ஆனால், நம்மவர்முனீஸ்வரன் நகரவில்லை.

பொறுத்து பார்த்த ஹோக் ஹ¤வாட் கெங் சீன ஆலயத்தார்கள் நேரம் கடந்துபோவதை எண்ணி, வருவது வரட்டும் என்று ‘துவா பேக் கொங்’ சிலையை வாகனத்தில்ஏற்றி விட்டார்கள். அந்த சமயம், முனீஸ்வரனுக்கு பூஜை செய்து வரும் பூசாரி மனமாரவேண்டி ஒரு எலுமிச்சை வெட்டி காணிக்கையாக செலுத்தினார்.

வேண்டுதல் வேண்டி நின்ற சமயமும், ‘துவா பேக் கொங்'சிலையையும் வாகனத்தில் ஏற்றி சமயமும் ஒரே நேரம்.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ததது. காலையிலிருந்து நகர மறுத்த முனீஸ்வரன்,தனது தம்பி ‘துவா பேக் கொங்' வாகனத்தில் ஏற்றியவுடன், ஒருகைக் கொண்டு வேலைபிடுங்கியவுடன். பூசாரி கையோடு லவகமாக வேல் வந்துவிட்டது.

நள்ளிரவில் புதிய ஆலயம் வந்து சேர்ந்தனர். ஹோக் ஹ¤வாட் கெங் சீனக்கோவில்[Hock Huat Keng] வளாகத்திலேயே சுமார் 100 சதுர அடி நிலத்தில் வீரமுத்து முனீஸ்வரர்க்குஒரு தனி இடம் கொடுக்கப்பட்டது. ஒரே இடத்தில் இருந்து அருள் பாலித்த காரணத்தால்முனீஸ்வரனைத் தனியாக விட்டுவிடாமல் தன்னோடு இணைத்து ஹோக் ஹ¤வாட் கெங்இருப்பது குறிப்பிடத்தக்கது.[ மனிதனுக்குள் இருக்கும் வேற்றுமை, தெய்வங்களுக்கிடையில் இல்லை என்பதற்கு இதுஒரு உதாரணம்]

சமய நல்லிணக்கம்.....

வீரமுத்து முனிஸ்வரருக்கும் மற்ற இந்து தெய்வங்களுக்கும் பல திருவிழாக்கள் இருந்தாலும்,இங்கு சனவரி முதல் நாள் காணிக்கை செலுத்தி வீரமுத்து முனீஸ்வரரை விமர்சியாகக்கொண்டாடி வருகிறார்கள். திருவிழா ஏற்பாடுகளைச் சீனக் குழு உறுப்பினர்களும் ஏற்று நடத்திவருகிறார்கள். இங்கே காணிக்கை செலுத்தும் பக்தர்கள் காவடி சுமப்பதில்லை.சீன ஆலயத்தில்பொதுவாக நீண்ட அலகுகள் குத்திக் கொள்ளூம் வழக்கம் இருப்பதால், நம்மவர்களும் நீண்டஅலகுகள் குத்தி காவடி எடுக்கிறார்கள்.

சீன ஆலயத்தில் இந்தியர்கள் என்பதால் சீன கலாசாரத்தை அறிந்து கொள்வது மட்டுமல்ல,அதைப் பக்தர்களும் அறிந்து கொள்ள முடிகிறது. சீனத் தெய்வங்களின் பெயர்களின் அனைத்தும்இப்போது மனதில் பதிந்துவிட்டது என்று கூறும் மேலாண்மை குழு சீன பக்தர்களும் நம் கலாச்சாரங்களைநன்கு அறிந்து வைத்துள்ளனர்.

இவ்வாலயத்தில் இந்திய பக்தர்களுடன் சீன பக்தர்களும் பால்குடங்கள் எடுப்பதும், அலகு காவடிஎடுத்து முனீஸ்வரன் சந்நிதிக்கு வருவதைக் காணலாம். சீன ஆலயத்தின் மேலாண்மை குழுத்தலைவர்திரு. ஜிம்மி இங்கிடம் கேட்ட போது ‘நாங்கள் மட்டுமல்ல எங்கள் தெய்வங்களும் சிறு வயது முதல்நண்பர்கள் என்று கூறுகிறார்.

இந்த ஆலயத்தின் பல இன சமுதாய வழிபாடு ஒற்றுமை உணர்வுதான் உயர்ந்திருக்கிறது!சீனர்கள் ஆலயத்தில் இந்து கடவுள் இருப்பதால் நமது இந்திய கலாச்சாரமும் இங்கே பின்பற்றப்படுகிறது. நன்னீராட்டு விழாவின் போது இந்துப் பக்தர்கள் பலர் முனீஸ்வரரின் தரிசனத்தைப்பெற்றுக் கொண்டு சீனக்கோவிலில் ஊதுவத்தி ஏற்றி வைத்தனர். சீனர்களும் வரிசை பிடித்து நின்றுமுனீஸ்வரரின் தரிசனத்தைப் பெறுகிறார்கள்.

சிங்கப்பூரில் பல இன மக்களிடையே இந்துக்களும் சீனர்களும் ஒன்றாக இணைந்து ஒரே இடத்தில்வழிபடுவது சிங்கப்பூரர்களின் தெய்வீக புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் பிரதிபலிக்கிறது.சிங்கப்பூரர்களின் புரிந்துணர்வுக்கும் ஒற்றுமைக்கும் இந்த கூட்டுக் கோவில் வழிபாடு ஒரு சிறந்தஉதாரணம் என்று கூறுகிறார் ஆலயத்தலைவர் திரு.சுகுமாறன்.

இரு ஆலயத்தில் பல இன சமுதாயத்தினர் வழிபடும் தெய்வங்கள் உண்டு என்பது ஒருபுறமிருந்தாலும்அந்த இரு ஆலயங்களிலும் சீனக் குழந்தைகளும் இந்திய குழந்தைகளும் ஒன்றாக வழிபாடுகள் செய்வதும்ஓடியாடித் திரிவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. நாட்டின் உறுதி மொழியை மனதில் தக்க வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த இரு ஆலயங்கள்.

ஆலய மேலாண்மை குழுவிலிருக்கும் இருக்கும் திரு.சுகுமாரன், திரு.ராஜாவின் கனிவானபேச்சும், சேவையும் ஆலய மேம்பாட்டிற்கு ஒரு மைல் கல்.

வீரமுத்து முனீஸ்வரர் ஆலயம் சிறியதுதான். ஆனால், அதன் அருள் வீச்சு நம்மை மெய் சிலிர்க்கவைக்கிறது. திரு. சுகுமாரனை பேட்டி காண நான் வீரமுத்து முனீஸ்வரர் சென்ற போது,மூனீஸ்வரன் சன்னிதானத்தில் நின்றபோது சில நிமிடங்கள் வீரமுத்து முனீஸ்வரர் அருளொளிஎன்னை சுற்றி நின்றது. அந்த அருளொளி வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

வீரமுத்து முனீஸ்வரர் ஆலயத்தில் ஒரே சன்னிதி. அதில் வீரமுத்து முனீஸ்வரர் கம்பீரமாகவீற்றிருக்கிறார் நின்ற கோலத்தில். வலது கையில் அரிவாள், இடது கையில் சூலம்- அருகில்இடது பக்கம் விநாயகர், வலது புறத்தில் அம்பாள் என பரிபாலம் செய்கிறார்.
சிறிய ஆலயம் என்றாலும், பக்தர் கூட்டம் அதிகம். வெள்ளீ,செவ்வாய் கிழமைகளில்108 எலுமிச்சை மாலை, மலர் மாலை என்று நம்மை பரவப்படுத்துகிறது. இந்தியர்கள்மட்டுமில்லை, சீனர்கள், இஸ்லாம் அன்பர்கள் சிலரும் பக்தி பரவசத்துடன் மெய்மறந்து,கண்மூடி நிற்பதைக் காண்லாம்.

தூய்மையான பராமரிப்பு, அமைதியான சூழ்நிலை,கனிவான வரவேற்பு இந்த நினைவோடுவிடைபெறலாம்.


Veera Muthu Muneeswaran Temple

(Hock Huat Keng Temple)

523 Yishun Industrial Park. A

Singapore. 768 7709459

7172 9190 7143 9028 2576